சிங்கப்பூரில் விமான சிப்பந்திகள் இங்கும் வெளிநாடுகளிலும் வழக்க மான நடவடிக்கைகளைத் தொடங்க முடியும். கொவிட்-19 பணிக்குழு கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், விமானநிலைய ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தால் போதும் என்றார்.
அதிக தொற்று ஆபத்துள்ள சூழலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கையுறைகளையும், முகமூடி யையும் அணிந்துகொள்ள வேண்டும். அவர்கள் காலக்கிரம முறைப்படியான கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டாம்.
விமானநிலையத்தில் இனிமேல் தனித்தனி தடுப்புகள் இருக்காது. ஆகையால் விமானப் பயணிகள் இடைவழிப் பயணிகள் கூடத்தில் தாராளமாக நடமாடலாம்.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகளில் கொவிட்-19 நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக செலுத்தவேண்டிய தொகை தொடர்பான கொள்கை மாற்றங்களையும் அமைச்சு அறிவித்தது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள் மருத்துவமனைகளிலும் சமூக சிகிச்சை நிலையங்களிலும் கொவிட்-19 சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் சிகிச்சைக்கான செலவை ஏற்கவேண்டி இருக்கும்.

