போதுமான உயிர்வாயு இல்லாததால் கப்பல் ஒன்றின் தொட்டிக்குள் சென்ற இரண்டு ஊழியர்கள் மாண்டதாக மனிதவள அமைச்சின் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
பங்ளாதேஷைச் சேர்ந்த திரு ஃபோர்ணஹட், திரு கோலில் இப்ராஹிம் ஆகிய இருவரும் 'கேஎஸ்இ மரீன் வொர்க்ஸ்' நிறுவனத்திற்கு வேலை செய்தனர். அவர்கள் உயிரைப் பலிவாங்கிய சம்பவம் சென்ற ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
அவ்விருவரும் நுழைந்த தொட்டியில் உயர்வாயுவின் அளவு 18.5 விழுக்காடு இருந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது. மனிதர்கள் இயங்க குறைந்தது 19.5 விழுக்காடு உயிர்வாயு தேவை என்று காவல்துறை விசாரணை அதிகாரி ருசாய்னி கூறினார்.

