மருத்துவ விடுப்பை மறுத்து வெளியே சென்றவருக்குச் சிறை

மருத்துவ விடுப்பை மறுத்து வெளியே சென்றவருக்குச் சிறை

1 mins read
5fee1ff8-bcaf-47d0-8a91-9f0483b4bf46
-

சென்ற ஆண்டு மார்ச் மாதம் சளிக்­காய்ச்­ச­லுக்­கான மருத்­துவ விடுப்பை நிரா­க­ரித்து வெளியே சென்ற, சளிக்காய்ச்சலுக்கான அறி­கு­றி­க­ள் இருந்த ஆட­வ­ருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டுள்­ளது. அந்த ஆட­வர் வேலைக்­குச் சென்­ற­து­டன் உண­வங்­காடி நிலை­யங்­கள், கடைத்­தொ­குதி ஆகிய இடங்­க­ளுக்­கும் சென்­றி­ருந்­தார்.

35 வயது ஸேக் லியாவ் சீ சியாங்­கிற்கு ஏழு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தொற்­று­நோய் சட்­டத்­தின்­கீழ் தன் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

தான் புதி­தாக வேலை­யில் சேர்ந்­த­தா­க­வும், அத­னால் மருத்­துவ விடுப்­பில் போக­மு­டி­யாது என்­றும் லியாவ் மருத்­து­வ­ரி­டம் கூறி­யி­ருந்­தார்.