கிளார்க் கீயில் எதிர்பாரா தாக்குதல், அதிர்ச்சியில் ஆடவர்

கிளார்க் கீயில் எதிர்பாரா தாக்குதல், அதிர்ச்சியில் ஆடவர்

1 mins read
3884877b-0e24-4814-b2b8-956463dfd6c7
தாக்கப்பட்ட ஆடவரின் தலையில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களுக்கு 20 தையல்கள் போடப்பட்டன.படம்: திருவாட்டி லோ -

கிளார்க் கீ பகு­தி­யில் ஆட­வர் ஒரு­வர் சில நொடி­களில் எதிர்­பாரா வித­மா­கத் தாக்­கப்­பட்டுள்ளார்.

மெர்ச்­சென்ட் சாலை­யில் உள்ள ஓர் உண­வ­கத்­தில் திரு சுவா என்று தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­ளும் நிதி ஆலோ­ச­கர் தனது நண்­பர்­க­ளு­டன் உண­வ­ருந்­திக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது சிறிது நேரம் தனி­யாக அரு­கில் இருந்த கடைக்­குச் சென்றி­ருக்­கி­றார்.

அந்த வேளை­யில் ஒரு­வர் கூர்­மை­யான பொரு­ளால் அவ­ரின் தலை­யில் தாக்­கி­னார். அதற்­குப் பிறகு திரு சுவா தனது நண்­பர்­களை நோக்கி மெது­வா­க நடந்து சென்­றி­ருக்­கி­றார்.

அவ­ரின் நண்­பர்­கள் மருத்­துவ உதவி வாக­னச் சேவைக்கு அழைத்­த­னர்.

திரு சுவா­வின் தலை­யில் ஏற்பட்ட வெட்­டுக் காயங்­கள் சுமார் 10 சென்­டி­மீட்­டர் நீளம் இருந்­தன. இச்­சம்­ப­வம் குறித்து புகார் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதா­க­வும் அவர்­கள் கூறி­னர்.