ஈஸ்வரன்: நிலையற்ற சூழலும் வாய்ப்புகளைத் தரக்கூடும்

ஈஸ்வரன்: நிலையற்ற சூழலும் வாய்ப்புகளைத் தரக்கூடும்

2 mins read
b3ab79f4-f050-4399-8b9b-8dcbc7ab04c9
தடையற்ற வர்த்தக தினம் 2022 நிகழ்வில், நிகழ்ச்சியின் நெறியாளர் டோன் டானுடன் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (இடம்). படம்: சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் -

சிங்­கப்­பூ­ரின் தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­கள், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஒப்­பந்­தங்­கள் ஆகி­ய­வற்றை உள்­ளூர் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அவற்­றுக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கேட்­டுக்­கொண்­டார்.

மரினா பே சேண்ட்ஸ் ஒருங்­

கி­ணைக்­கப்­பட்ட உல்­லா­சத் தலத்­தில் நடை­பெற்ற சிங்­கப்­பூர் ஏபெக்ஸ் வர்த்­தக உச்­ச­நிலை மாநாட்­டில் பேசிய திரு ஈஸ்­வ­ரன், உல­க­ளா­விய பொரு­ளி­யல், பெரு­ம­ள­வி­லான சவால்­க­ளைத் தொடர்ந்து எதிர்­நோக்­கு­வ­தா­கக் கூறி­யனா்.

புவி­சார்ந்த அர­சி­யல் அழுத்­தங்­கள், பண­வீக்­கப் பிரச்­சி­னை­கள், விநி­யோக இடை­யூறு, உல­க­ம­ய

மா­தல் எதிர்ப்பு, உக்­ரேன் மீது ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு ஆகி­யவை உல­க­ளா­விய பொரு­ளி­ய­லைப் பாதிப்­ப­தாக திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், நிலை­யற்ற சூழல் மூல­மா­க­வும் வாய்ப்­பு­கள் கிடைக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

உதா­ர­ணத்­துக்கு, கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் விரை­வுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

கொவிட்-19 சூழ­லுக்கு முன்பு மின்­னி­லக்­கத் திற­னில் ஆர்­வம் காட்­டாத நிறு­வ­னங்­கள் தற்­போது அதைக் கடைப்­பி­டிப்­ப­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான மின்­னி­லக்­கத் திட்­டம் வாயி­லாக 80,000க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.

"இந்­தச் சவால்­களை எதிர்­கொண்டு, புதிய வாய்ப்­பு­களை நாம் பயன்­ப­டுத்தி வரும் நிலை­யில், சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மேலோங்க வர்த்­த­கம் தொடர்ந்து முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கிறது," என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் சிங்­கப்­பூ­ரின் வர்த்­த­கத் தொடர்­பு­களை மேம்­ப­டுத்­து­வ­தாக அவர் கூறி­னார்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் வர்த்­த­கம் 2030 உத்­தி­மு­றையை வர்த்­தக, தொழில் அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­ம­தியை $805 பில்­லி­ய­னி­லி­ருந்து $1 டிரில்­லி­ய­னுக்கு உயர்த்த அது இலக்கு கொண்­டுள்­ளது.