கொவிட்-19 கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்படுகின்றன. விதிமுறை மாற்றம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.
பயனீட்டாளர் நுண்ணறிவு, பகுப்பாய்வு நிறுவனமான மில்லியு இன்சைட் நேற்று முன்தினம் நடத்திய இந்த ஆய்வில் 16 வயதும் அதற்கும் மேற்பட்ட 1,010 பேர் பங்கெடுத்தனர்.
அவர்களில் 77 விழுக்காட்டினர் கட்டுப்பாட்டுத் தளர்வுகளை வரவேற்றுள்ளனர்.
நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் மாற்றங்களில் உணவகங்களில் அதிகபட்சம் பத்து பேர் வரை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் அடங்கும்.
இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வுக்கு ஆக அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கு 75 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர்.
வீடுகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 பேர் ஒன்றுகூட வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு 72 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர்,
வெளியிடங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பம் என்ற அறிவிப்புக்குக் கிடைத்துள்ள ஆதரவு குறைவாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு 52 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.
இந்த மாற்றங்கள் இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
கொவிட்-19 கிருமித்தொற்றுடன் வாழ்வது இனி வழக்கமானதாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.


