பைனியர் ரோடு நார்த் சாலையில் மூன்று வாகனங்கள் விபத்துக்கு உள்ளாயின.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெரிய லாரி ஒன்று கவிழ்ந்தது. விபத்தின் காட்சிகளைக் கொண்ட காணொளிகளில் மருத்துவ உதவியாளர்களும் அதிகாரிகளும் லாரி ஓட்டுநரை மீட்பது பதிவானது. அந்த ஓட்டுநர் லாரியின் இருக்கையில் சிக்கியிருந்தார்.
மீட்புப் பணிகளில் உலோக பாகங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் 'ஹைட்ராலிக்' கருவி உபயோகிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த வேளையில் அவருக்கு சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையினர் கூறினர். லாரியில் இருந்த பொருள்கள் சாலையின் மூன்று தடங்களில் சிதறியதைக் காணொளிகள் காண்பித்தன.
இரண்டு லாரிகளும் ஒரு வாகனமும் சிக்கிய விபத்து குறித்து நேற்று காலை சுமார் 8.35 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. இந்த விபத்து பைனியர் சாலைக்கும் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ ஐந்துக்கும் இடையே உள்ள சாலையில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

