சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட 'மரீன் கேஸ் ஆயில்ஸ்' எனப்படும் கடல்துறை எரிபொருள் திரவம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 32 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கடல்துறைக் காவல் படையும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மூன்று டன்கள் எரிபொருள் திரவம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை செம்பவாங் கப்பல் பட்டறைக்கு அருகே உள்ள நீர்ப்பகுதியில் இடம்பெற்றது.
கைதான மூவர் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட படகின் ஊழியர்கள். இதர ஏழு பேர் வெளிநாட்டுப் படகு ஒன்றின் ஊழியர்கள்.

