பெண் மீது காவல்துறையிடம் புகார் தந்த கேகே மருத்துவமனை

பெண் மீது காவல்துறையிடம் புகார் தந்த கேகே மருத்துவமனை

2 mins read
940e6a28-4d7a-463c-848c-1bf97c21d262
-

சிகிச்­சைக்­காக கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்குச் சென்ற­போது தான் நான்கு மணி­நே­ரம் வரை காத்­தி­ருக்­க­வேண்­டி­யி­ருந்­த­தா­க­வும் அதற்­குப் பிறகு தனது வயிற்­றில் இருந்த சிசு கலைந்­து­போ­ன­தா­க­வும் சொன்ன பெண் மீது காவல்­து­றை­யி­டம் புகார் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பெண் தவ­றான தக­வ­லைத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கேகே மருத்­து­வ­மனை புகார் தந்­துள்­ளது.

அச்­சம்­ப­வம் குறித்து இணை­யத்­தில் பதி­வி­டப்­பட்ட தக­வல்­கள் தவ­றா­னவை என்று கேகே மருத்து­வ­ம­னை­யின் தலைமை நிர்­வாக அதி­காரி அலெக்ஸ் சியா கூறி­னார். அந்­தப் பெண் கூறி­ய­தும் உண்­மை­யில் நடந்த நிகழ்­வு­களும் மாறு­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"அப்­படி ஏதும் நடக்­க­வில்லை என்று எங்களால் உறு­தி­யா­கச் சொல்­ல­மு­டி­யும். அத­னால் நாங்­கள் காவல்­து­றை­யி­டம் புகார் கொடு­த்துள்­ளோம்," என்று பேரா­சி­ரி­யர் சியா சொன்­னார்.

பிற்­ப­கல் இரண்டு மணிக்கு கேகே மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­தாக அந்தப் பெண் கூறி­யி­ருந்­தார். அதற்­குப் பிறகு வாக­னத்­தி­லி­ருந்து பிறரை இறக்­கி­வி­டும் பகு­தி­யில் தான் காக்­க­வைக்­கப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

மாலை ஐந்து மணிக்குத் தனது உட­லி­லி­ருந்து ரத்­தம் வெளி­யா­ன­தா­க­வும் அப்படிப்பட்ட சூழலிலும் தனக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறை­கூறி­னார். சுமார் ஆறு மணிக்கு மருத்­து­வ­ரைப் பார்த்தபோது வயிற்­றில் இருந்த சிசு கலைந்­துபோன­தாக அவர் சொன்னார்.

சுகா­தா­ரப் பாரா­ம­ரிப்­புத் துறை­யில் இது அனை­வ­ருக்­கும் முக்­கி­ய­மான ஒரு தரு­ணம் என்று பேராசிரியர் சியா குறிப்­பிட்­டார். முடிந்­த­வரை எல்லா நோயா­ளி­களை­யும் தனது மருத்­து­வ­மனை கவனித்துக்­கொள்­ளும் என்று அவர் தெரி­வித்­தார். எல்லா கருத்­து­க­ளை­யும் தாங்­கள் வர­வேற்­றா­லும் பொய்த் தக­வல்­கள் இடம்­பெ­றும்­போது அவற்­றைச் சரி­வ­ரக் கவனிக்­க­வேண்­டும் என்பதைப் பேரா­சி­ரி­யர் சியா சுட்டி­னார்.