வராது வந்த மாமணிபோல் வரும் சூழல்; பொறுப்புடன் நடப்போம்

வராது வந்த மாமணிபோல் வரும் சூழல்; பொறுப்புடன் நடப்போம்

4 mins read
f7142c7f-a775-4aab-85a9-e2a13c2d68b6
-

இன்­ன­மும் பயம் இருந்­தா­லும் அப்­பாடா என்று கொஞ்­சம் நிம்­மதி பெரு­மூச்­சு­வி­டும் நேரம் கைகூடி வரு­கிறது. பெரிய கண்­டத்­தில் இருந்து தப்­பி­விட்­டோம், இனி எப்­ப­டி­யும் பிழைத்துவிட­லாம் என்ற நம்­பிக்கை ஏற்­படும் அள­வுக்குச் சூழ்நி­லை­கள், நில­வ­ரங்­கள் திரும்­பு­கின்­றன.

கொரோனா பிடி­யில் கடந்த இரண்டு ஆண்­டு­களாகச் சிக்கி, வாழும் வழியே மாறிப்­போய், உற்­றார், உற­வி­னரை, நண்­பர்­க­ளைப் பார்க்க முடி­யா­மல், பழக முடி­யா­மல், வேலைக்­குப் போக முடி­யா­மல், வெளியே தலை­காட்­டக்­கூட முடி­யா­மல் நாம் பட்ட சிர­மம் கற்­ப­னை­யில்­கூட நினைத்­துப் பார்க்க முடி­யாதது.

ஒரு பக்­கம் வீட்­டுக்கு இழப்பு; மறுபக்­கம் நாட்டுக்கு இழப்பு, தனிப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்பு, நிறு­வ­னங்­க­ளுக்கு இழப்பு, வேலை இழப்பு, பொருளி யல் இழப்பு, மனநல இழப்பு என்று பல இழப்­பு­களை நாம் சந்­தித்­தாலும் மக்­களும் நிறு­வ­னங்­களும் மற்ற அனை­வரும் புரிந்­து­ணர்­வு­டன் ஒற்­று­மை­யாக, அர­சாங்­கத்­து­டன் சேர்ந்து ஒத்­து­ழைத்து செயல்­பட்­ட­தன் கார­ண­மாக இன்று நிலைமை மாறி வருகிறது.

உல­கை­விட்டு, நம்மை­விட்டு கொவிட்-19 அறவே ஒழி­யாது என்ற நிலை­யில் அதோ­டு­தான் வாழ வேண்­டிய நிலைக்கு மன­ரீ­தியி­லும் படிப்­படி­யாக மாற நாம் தயா­ரா­கி­விட்­டோம்.

கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் விவே­க­மாக நடந்­து­கொண்­டோம். ஒரே ஓர் ஆயு­த­மாக நமக்­குக் கிடைத்த தடுப்­பூ­சியை உல­கம் வியக்­கும் அளவுக்குச் செம்­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்கொண்­டோம். சுகாதாரப் பரா­ம­ரிப்பு ஆற்­றலை வலு­வாக்கினோம். அதை திறம்­பட நிர்வகித்தோம். சுகாதார பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் தங்­க­ளையே அர்ப்­பணித்­தார்­கள். பாதிப்பு, மரணங்களைக் குறைத்துக்கொண்டோம்.

மாறி மாறி நடப்­புக்கு வந்த பாது­காப்பு விதிகளுக்கு ஏற்ப நிறு­வ­னங்­களும் உட­னுக்­கு­டன் மாறிக்­கொண்­ட­தால் விநி­யோ­கக் கட்­ட­மைப்பு துண்­டிக்­கப்­ப­டா­மல் பாது­காக்­கப்­பட்­டது. அர­சாங்­கம் ஏரா­ள­மான உதவி, ஆத­ரவு, அர­வணைப்பு, உறு­துணைத் திட்­டங்­களை நடை­மு­றைப்­படுத்­தி­யது.

இவற்­றின் விளை­வாக ஒரு திருப்­பு­முனைக்கு நாம் வந்­துள்­ளோம். நாம் மகிழ்ந்து பழை­ய­படி வாழும் காலம் திரும்­பு­கிறது. இதைக் கெடுத்து இறங்­குமு­க­பாதையில் நாம் இறங்கிவிடக்கூடாது.

ஆகை­யால் தொடர்ந்து எப்­படி செயல்­ப­டு­வது என்­ப­தைச் சிந்தித்து அள­வ­றிந்து, அதே வேளையில் திட்­ட­வட்­டமான நட­வ­டிக்­கை­களை அமலாக்க சிங்­கப்­பூர் இப்போது ஆயத்­த­மாகி வரு­கிறது.

கொரோனா 2020ல் தலை எடுத்­த­போ­தி­லி­ருந்து கடந்த இரண்டு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்குக் கட்­டுப்­பா­டு­களை அர­சாங்­கம் தளர்த்த இருக்கிறது.

பொதுமக்­கள், வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் 10 பேர் வரை கூடி, கலந்­து­ற­வாடி, வெளியே சாப்­பிட்டு மகி­ழ­லாம். நீங்­கள் வெளியே செல்­லும்­போது முகக்­க­வ­சம் அணி­ய­ வேண்டும் என்ற கட்டாயமும் இனி இருக்காது. விரும்பினால் அதை நீங்கள் அணியலாம். இருந்தாலும், வகுப்பறை, கூடங்கள் போன்ற உள்ளிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை இருக்கும்.

வீட்­டில் இருந்து வேலை­பார்க்­கக்­கூ­டிய ஊழியர்­களில் 75% வரைப்­பட்­ட­வர்­கள் வேலையிடம் திரும்ப அனுமதிக்­கப்­ப­டு­வார்­கள். பெரிய பெரிய நிகழ்ச்சிகள், மேடைக்­கலை நிகழ்ச்­சி­க­ளுக்­கான கட்டுப்பாடு­கள் தளர்­கின்­றன. இரண்­டாண்டு கால­மாக முடங்­கியே கிடந்த மேடைக் கலை­ஞர்­க­ளுக்கு இதன் விளைவாக மீண்டும் புத்­து­யிர் கிடைக்­க வழி ஏற்படும்.

இரவு 10.30க்குப் பிறகும் மதுபான விற்­ப­னை­யும் அனுமதிக்கப்படும். இவை எல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனை­வ­ரும் சிங்­கப்பூர் வர ஏப்ரல் 1 முதல் அனு­மதி கிடைக்­கும்.

தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ருக்­கான பய­ணப்­பா­தைத் திட்­டத்­தின் கீழ் (விடி­எல்) விமா­னங்­கள் செயல்­ப­டாது. முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்கும் இடை­யில் தாரா­ள­மா­கச் சென்று வர­லாம்.

அவர்­க­ளுக்­குப் பரி­சோ­த­னையோ, தனி­மைப்­படுத்­திக்கொள்ள வேண்­டிய தேவையோ இனி இருக்­காது. பக்­கத்து நாடு­க­ளான சிங்­கப்­பூ­ருக்­கும் மலேசி­யா­வுக்­கும் இடை­யில் சமூக, பொரு­ளி­யல் நட­வ­டிக்கை­கள், மக்­க­ளுக்கு இடைப்­பட்ட உற­வு­கள் எல்­லாம் மீண்­டும் சூடு­பி­டிக்­கும்.

இரு நாட்டு மக்­களும் இரண்­டாண்டு கால­மாக ஏங்­கிக் கிடந்த, காத்­துக்கிடந்த காலம் போய் விரும்பிய நல்ல காலம் திரும்பும்.

இவை எல்­லாம் எந்த அள­வுக்குப் பொரு­ளி­யல் ரீதி­யி­லும் மன ரீதி­யி­லும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் மகிழ்ச்சி யை­யும் மாற்­றத்­தை­யும் ஊக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் என்­பதை வர்­ணிக்க இய­லவில்லை. புதிய உற்­சா­கம், புதுப்­பொ­லிவு புதிய நம்­பிக்­கையை இவை ஏற்­படுத்­தித் தரும் என்பது திண்ணம்.

சிங்­கப்­பூர், கடந்த இரண்­டாண்­டு­களில் கொரோ னா­வுக்கு எதி­ராக அரங்­கேற்­றிய போராட்­டத்­தில் பல அனு­கூ­லங்­க­ளைச் சம்­பா­தித்துக்கொண்டு இருக்­கிறது. முதன்­மு­த­லாக கொரோனா தலை­காட்­டிய காலத்­தில் இருந்­த­தை­விட இப்­போது நாடு, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை, மக்­கள் எல்­லா­ரும், எவ்­வ­ளவோ சிறந்த நிலை­யில் மேம்­பட்டு இருக்­கிறார்­கள். இனி ஒரு முறை கிருமி தலைதூக்கினால் அதை திறம்பட சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது பலமடைந்துள்ளது.

மக்­களும் அர­சாங்­க­மும் ஒரே நாடா­கச் சேர்ந்து செயல்­பட்­ட­தன் விளை­வாக வராது வந்த மாமணி போல் வந்­தி­ருக்­கும் இந்த மகிழ்ச்­சி­க­ர­மான நிலையை அனு­ப­விக்­கப்போகும் நாம், அதே வேளையில் சில நில­வரங்­களைக் கருத்­தில்கொள்ள வேண்­டும். இது மிக முக்­கி­ய­மா­னது.

கொவிட்-19 கிருமி இன்­ன­மும் நம்­மை­விட்டு முற்­றி­லும் அக­ல­வில்லை என்­பதை நாம் அனை­வரும் எப்­போ­துமே நினை­வில் கொள்ள வேண்­டும். இப்போதுகூட கிரு­மித்­தொற்­றுக்கு அன்­றா­டம் பலரும் ஆளாகி வரு­கி­றார்­கள் என்­பதை மறக்கக்கூடாது.

உல­கம் இது­வரை சந்­தித்­தி­ராத புது­மை­யான கிரு­மி­யாக கொவிட்-19 இருக்­கிறது. எந்த நேரத்திலும் எந்த சூழ­லி­லும் அது உரு­மாறி புதிய வடி­வில் தலை­யெ­டுக்­கும் ஆபத்­தும் அக­ல­வில்லை என்பதை சிங்கப்பூரர்கள் அலட்சியப்படுத்தக்கூடாது.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வதை அடுத்து, வழக்­க­நிலை வந்­து­விட்­ட­தாக நினைத்து, பெரும் உற்­சா­கம் பீறிட்டு, மக்­கள் ஒரு­வரை ஒரு­வர் சந்­தித்து கொண்­டாடி கலந்துறவாடி பயணம் மேற் கொண்டு மகி­ழக்­கூ­டும். இதில் தவ­றில்லை.

ஆனா­லும் ஒவ்­வொ­ரு­வ­ருமே கொரோ­னா­வின் தன்­மை­களை மன­தில் கொண்டு சமூக ரீதி­யி­லும் தனிப்­பட்ட முறை­யி­லும் பொறுப்­பு­டன், விவே­க­மாக நடந்­து­கொள்ள வேண்­டும். இப்படி ஒரே நாடாக ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் செயல்படும்பட்சத்தில் எந்தக் கிருமியையும் வீழ்த்திவிடலாம் என்ற நம்பி பிக்கையுடன் நாம் நடைபோடலாம்.