உணவு, பான நிலையங்களில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்கின்றன. இதை அந்தத் தொழில் நடத்துவோர் வரவேற்று இருக்கிறார்கள்.
விதிகள் தளர்வதை அடுத்து உணவங்காடிகள், காப்பிக்கடைகள், உணவகங்கள் போன்ற நிலையங்களில் உள்ள சுற்று அடைப்புகள் அகற்றப்படும்.
அவற்றில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் சேர்ந்து சாப்பிட அனுமதி உண்டு.
அந்த இடங்களில் தடுப்பூசி அடிப்படையில் வாடிக்கையாளர்களை வேறுபடுத்தும் பாதுகாப்பு நடைமுறையை அமலாக்க வேண்டிய தேவை இராது.
உள்ளே வருவோருக்கு வில்லையையும் கொடுக்க ேவண்டியதில்லை.
இதனிடையே, இதுபற்றி சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் கூறிய, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், உணவங்காடி கடைக்காரர்கள் சங்கம், காப்பிக் கடைக்காரர்கள் சங்கம், காப்பிக்கடைக் காரர்கள் ஆகியோரைத் தான் சந்தித்ததாகவும் அவர்கள் கட்டுப்பாடுகள் அகல்வதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.