'ஓங் சண்முகம்' என்ற நவநாகரீக ஆடை நிறுவனத்தை நிறுவிய திருவாட்டி பிரிசில்லா சண்முகம் சென்ற ஆண்டு ஆசிய கலாசார அருங்காட்சியகம் நடத்திய விரிவுரை நிகழ்ச்சியில் தான் தெரிவித்த இனம் தொடர்பான கருத்துகளுக்காக இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
அந்த விரிவுரை 2021 செப்டம்பரில் நிகழ்ந்தது என்றாலும் அண்மையில் அவரின் கருத்து இணையத்தில் பரபரப்பானது.
மாதர் அணியும் பாரம்பரிய சீன உடை பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில் மலாய், இந்திய மாதர்களுடன் ஒப்பிடுகையில் சீன மாதர்கள் கணிசமான அளவுக்கு வேகமாக ஒரு படி மேலாக எப்படி மேம்பட்டு இருக்கிறார்கள் என்பது பற்றி அவர் பதிலளித்து இருந்தார்.

