'சிங்கப்பூருக்கு இன்னமும் பயங்கரவாத மிரட்டல் அதிகம்'

'சிங்கப்பூருக்கு இன்னமும் பயங்கரவாத மிரட்டல் அதிகம்'

1 mins read
be336a93-362d-4648-9a2d-e10e2c65a34e
-

சிங்­கப்­பூ­ருக்கு பயங்­க­ர­வாத மிரட்டல் இன்­ன­மும் அதி­க­மாக இருக்­கிறது. வெளி­நா­டு­களில் நிக­ழும் சம்­ப­வங்­கள் நம்­ உள்­நாட்டுப் பாது­காப்­பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்திவிட முடி­யுமென உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் தெரி­வித்­தார்.

இந்­திய முஸ்­லிம் சமூ­க சேவை சங்­கத்­தின் இளை­யர் கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான அவர், உக்­ரே­னில் இப்­போது நிக­ழும் நெருக்­க­டியை எடுத்­துக்­காட்­டாகக் குறிப்­பிட்­டார்.

அங்கு கணிக்க முடி­யாத சூழ்­நிலை தொடர்ந்து இருந்து வரு­கிறது என்று தெரி­வித்த துணை அமைச்­சர், உக்­ரே­னில் ரஷ்யா படை­யெ­டுத்­த­தன் தொடர்­பில் சிங்­கப்­பூர் தன்­னு­டைய நிலையைத் தெள்­ளத்­தெ­ளி­வாக தெரி­யப்­படுத்தி இருப்­ப­தைச் சுட்­டி­னார்.

உக்­ரேன் மீது ரஷ்­யா படை­எடுத்­ததை சிங்­கப்­பூர் வலு­வா­கக் கண்­டித்து இருக்­கிறது. உக்­ரேன் போரில் சிங்­கப்­பூ­ரர்­கள் யாரா­வது பங்­கெ­டுத்­தால் அது சட்­டத்­துக்­குப் புறம்­பா­னது என்­பதைக் குறிப்­பிட்ட அமைச்­சர், நண்­பர்­கள் யாரா­வது இதுபற்றி கேட்­டால் இந்த நிலையை அவர்­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்­து­மாறு இளை­ஞர்­களைக் கேட்­டுக்­கொண்­டார்.

இருந்­தா­லும் உக்­ரே­னி­யர்­களுக்கு உதவ விரும்­பு­வோர் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் போன்ற சட்­ட­பூர்­வ­மான வழி­கள் மூலம் உத­வ­லாம் என்று துணை அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்கப்பூரில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக இந்திய முஸ்லிம் சமூகம் மேம்பட இந்­திய முஸ்­லிம் சமூ­கச் சேவை சங்­கம் ஆற்றிவரும் நல்ல பணிகளைப் பாராட்டினார்.