சிங்கப்பூர் காவல்துறை, மோசடிகளில் ஈடுபடுவோரைப் பிடிப்பதற்காக விரித்த வலையில் 35 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் ஆறு பேர் பெண்கள்.
முதலீடு, வேலை வாய்ப்பு மோசடி களுக்கு எதிராக தீவு முழுவதும் நான்கு நாள் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 16 முதல் 66 வயது வரையிலான 35 பேர் கைது செய்யப்பட்டதாக நேற்றைய அறிக்கையில் காவல்துறை கூறியது.
31 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட மோசடிகளில் சுமார் 1,200 வழக்குகளுடன் தொடர்பு உடைய 255 சந்தேக நபர்களில் இவர்களும் அடங்குவர்.
ஓசிபிசி, டிபிஎஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யுஓபி, எச்எஸ்பிசி ஆகிய உள்ளூர் வங்கிகளுடன் சேர்ந்து செவ்வாய் முதல் வெள்ளி வரை சோதனை நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மோசடிக்காரர்கள் அடையாளம் காணப்பட்டனர். வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளிப்பதற்கு முன்பாகவே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.
அமலாக்க நடவடிக்கைகளை நேரில் பார்வையிட ஊடகங்களும் அழைக்கப்பட்டிருந்தன. இதனால் போலிஸ் கண்டோன்மெண்ட் வளாகத்தில் உள்ள மோசடித் தடுப்புப் பிரிவில் நடைபெற்ற சில விசாரணைகளை செய்தியாளர்கள் காண முடிந்தது. முதலீட்டு மோசடிகளைப் பற்றி விளக்கிய காவல்துறை, அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடிக்காரர்கள் ஏமாற்றுவதாகக் கூறியது.
ஏமாற்றப்படும் வாடிக்கையாளர்கள், நிதி நிபுணர் என்று கூறப்படும் நபரிடம் அறிமுகப்படுத்தப் படுகின்றனர். அப்போது, முதலீடு மூலம் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்கும் சில குறிப்புகளை அந்த நிபுணர் பகிர்ந்துகொள்கிறார்.
பெரும்பாலான சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு ஆரம்பத்தில் சிறிது லாபம் கிடைக்கிறது.
இன்னமும் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என்றும் உடனடியாக பணத்தை வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கும் படியும் மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். பணம் கிடைத்ததும் அவர்கள் மாயமாகி விடுகின்றனர் என்று காவல்துறை சொன்னது.
வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்களில் உடனடியாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
விலை உயர்ந்த பொருட்கள் இணையம் வழியாக பாதிக்கப்பட்டவர்கள் வாங்க வைக்கப்படுகின்றனர். விற்பனையை அதிகரிக்கும் உத்தியாக இத்தகைய மோசடி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சி கரமான லாபம் கிடைக்கிறது. ஆனால் பெரிய தொகைக்கு பொருளை வாங்கியதும் மோசடிக்கார்களின் தொடர்பு துண்டிக்கப் படுகிறது. சிங்கப்பூரில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. கடந்த ஆண்டு நடந்த மோசடிகளில் 630 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இது, 2020ஆம் ஆண்டின் 268.4 மில்லியன் ெவள்ளி மோசடிகளைவிட இரண்டரை மடங்கு அதிகம்.

