முதலாளிகள் நியாயமாக பரிசீலிக்க வேண்டும்

முதலாளிகள் நியாயமாக பரிசீலிக்க வேண்டும்

2 mins read
da28f1c4-7197-4a20-be36-03cd4ccfe32a
ஊழியர்களின் கோரிக்கையை முதலாளிகள் முறையாக பரிசீலிக்க ேவண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2024ஆம் ஆண்­டு­வாக்­கில் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்­டுக்கு ஊழி­யர் கோரிக்கை விடுத்­தால் அதனை முத­லா­ளி­கள் நியா­ய­மா­க­வும் முறை­யா­க­வும் கவ­ன­மா­க­வும் பரி­சீ­லிக்க வேண்­டும்.

இத்­த­கைய ஏற்­பாட்­டுக்­கான புதிய வழி­காட்டி இதனை வலி­யுறுத்துகிறது.

ஆனால் முத­லா­ளி­கள் தங்­க­ளு­டயை வர்த்­தக தேவை­க­ளுக்கு ஏற்ப அதனை அங்­கீ­க­ரிக்­கவோ, நிரா­க­ரிக்­கவோ முடி­யும்.

இந்த இடைக்­கா­லத்­தில் முத­லா­ளி­கள் தாங்­க­ளா­கவே முன்­வந்து முத்­த­ரப்பு பங்­கா­ளி­க­ளுக்­கி­டையே நீக்­குப்­போக்­கான வேலை நடை­ மு­றை­கள் கடைப்­பி­டிப்­பதை அர­சாங்­கம் அதி­க­ரிக்க எண்­ணம் கொண்டு உள்­ளது. தற்­போது அனைத்து ஊழி­யர்­களில் 27 விழுக்­காட்­டி­னர் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்­டின் கீழ் உள்­ள­னர். இதனை இவ்­வாண்டு இறு­திக்­குள் 40 விழுக்­கா­டாக அதி­க­ரிப்­பது அர­சாங்­கத்­தின் நோக்­க­மா­கும்.

வேலை-வாழ்க்கை சமநிலைக்கு ஆத­ர­வான முயற்­சி­கள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும். பெற்­றோர் விடுப்­பைப் பயன்­ப­டுத்த ஊக்­கு­விக்­கப்­படும். இதற்கு பொதுச் சேவைப் பிரிவு முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கும்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்­கம் கேட்­ட­தற்கு பதில் அளித்த மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங், கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய கால­கட்­டத்­தில் வேலை­யி­டங்­களில் இல­கு­வான வேலை ஏற்­பாடு (எஃப்ட­பிள்­யூஏ) முக்­கிய அம்­ச­மாக இருக்­கும் என்று குறிப்­பிட்­டார்.

"இது, முத­லாளி-ஊழி­யர் இடை­யி­லான இரு­த­ரப்பு வெற்­றி­யைக் குறிக்­கிறது," என்­றார்.

"நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாடு ஆண், பெண் இரு­வ­ருக்­கும் பல­ன­ளிக்­கும். மேலும் பரா­ம­ரிப்பு பொறுப்­பில் உள்­ள­வர்­கள் தொடர்ந்து வேலை செய்­யவோ அல்­லது வேலைக்­குத் திரும்­பவோ முடி­யும். இவ்­வ­ழி­யில் முத­லா­ளி­கள் அதிக திற­னா­ளர்களைப் பயன்­ப­டுத்­த­லாம். மேலும் நீக்­குப்போக்­கான ஏற்­பாடு­ க­ளால் முத­லா­ளி­கள் தங்­க­ளு­டைய வர்த்­த­கங்­களை எதிர்­கா­லத்திற்கு ஏற்ப உரு­மாற்­ற­வும் சிறந்த திற­னாளர்­களை தக்கவைத்­துக் கொள்­ள­வும் முடி­யும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

25 முதல் 64 வயது வரை­யி­லான ஊழி­யர்­களில் பத்­தில் ஒன்­பது பேர் 2020ல் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்டை பெற்­ற­னர். இது, 2014ல் பத்­தில் ஆறு ஊழி­யர்­க­ளாக இருந்­தது என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட மாதர் மேம்­பாட்டு அறிக்கை தெரி­வித்­தது.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்­டுக்­கான முத்­த­ரப்­புக் குழு, அதனை எப்­படி அமல்­ப­டுத்­து­வது என்­பது குறித்து வழி­காட்­டு­கிறது.