பராமரிப்பாளர்களுக்கு அதிக உதவி

பராமரிப்பாளர்களுக்கு அதிக உதவி

1 mins read
a30513b2-2ba6-45c5-84e8-b3c422c10d53
பராமரிப்பாளர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக மானியத்தை அரசாங்கம் அதிகரிக்கவிருக்கிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு அதிக ஆதரவு வழங்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக அவர்களுக்கு மானி­யம் அதி­க­ரிக்­கப்­ப­ட­விக்­கிறது.

உணவு வழங்­கு­தல், குளிக்க வைத்­தல் போன்ற அன்­றாட நட­வ டிக்­கை­க­ளில் உதவி தேவைப்­ப­டு­வோரை பரா­ம­ரிப்பவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மானி­யம் வழங்­கப்­படும்.

தனி­ந­பர் குடும்ப வரு­மா­னம் 1,200 வெள்ளி கொண்­ட­வர்­க­ளுக்­கும் 13,000 வெள்ளி வரை­யி­லான ஆண்டு மதிப்­பைக் கொண்ட வீடு­களில் வரு­மா­னம் இல்­லா­மல் வசிப்­போ­ருக்­கும் வீட்­டுப் பரா­ம­ரிப்பு மானி­யம் 200 வெள்­ளி­யி­லி­ருந்து 400 வெள்ளி வரை இரட்­டிப்­பாக்­கப்­படும்.

$1,200 முதல் 2,800 வெள்ளி வரை­யி­லான தனி­ந­பர் குடும்ப வரு­மா­னம் கொண்­ட­வர்­கள் தற்­போ­துள்ள 200 வெள்­ளி­யை­விட சற்­றுக் கூடு­த­லாக 250 வெள்­ளி வரை பெறுவார்கள்.

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் நிதிச் சுமை­யைக் குறைக்­கும் வகையில் ேமலும் கூடுதல் உதவிகள் இடம் பெறும். பரா­ம­ரிப்­பா­ளர்­களில் பெரும்­பா­லோர் பெண்­க­ளாக இருக்­கின்­ற­னர். இத­னால் அவர்­க­ளுக்கு அதிக ஆத­ரவு வழங்­கப்­படும் என்று அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று வெளியிடப்பட்ட மாதர் பிரச்சினை தொடர்பான வெள்ளை அறிக்கையில் இந்த உத்தேச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.