கிருமிப் பரவல் காரணமாக மூடப்பட்ட சிங்கப்பூர், மலேசிய எல்லைகள் நீண்டகாலத்திற்குப் பிறகு திறக்கப்படுவதால் இரு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியவாசிகள், கடவுச்சீட்டை தூசு தட்டி வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
வரும் ஏப்ரல் 1ஆம் அனைத்துலக எல்லைகள் திறக்கப்படுவதாக சிங்கப்பூரும் மலேசியாவும் அறிவித்து உள்ளன.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து உள்ளூர் விமான நிறுவனங்களில் வெளிநாட்டுப் பயணங் களுக்கான முன்பதிவுகள் நிரம்பி வருகின்றன.
குறிப்பாக ஆசிய வட்டார பயணங்களுக்கான முன் பதிவுகள் அதிகரித்துள்ளன.
ஏர்ஏஷியா மலேசியாவின் தலைமை நிர்வாகியான ரியாட் அஸ்மட், எல்லைத் திறப்பு அறிவிப்பு வெளியானதிலிருந்து அனைத்துலக பயணங்களுக்கான முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர், இந்தோனீசியா (ஜகார்த்தா, சுரபாயா, பாலி), பிலிப்பீன்ஸ் (மணிலா), தாய்லாந்து (பேங்காக், புக்கெட்), வியட்னாம் (ஹோ சி மின்), பங்ளாதேஷ் (டாக்கா) உள்ளிட்ட இடங்கள் பயணிகளிடம் பிரபலமாக விளங்குவதாகவும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் மட்டுமல்லாமல் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளின் எல்லைகளும் திறக்கப் படுகின்றன.
இதனால் இவ்வாண்டு இறுதிக்குள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் 100 விழுக்காடு அல்லது கொவிட்-19க்கு முந்தைய நிலையை அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிைடயே ஏர்ஏஷியா மலேசியப் பேச்சாளர் ஒருவர், தேவை அதிகரிக்கும்போது விமானப் பயணங்களின் கட்டணம் கூடும் என்பதால் முன்கூட்டியே பயணங்களைத் திட்டமிட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
மலேசிய ஏர்லைன்சிலும் பிப்ரவரி மாதத்தைவிட தற்போது தினசரி முன்பதிவுகள் 70 விழுக்காட்டு கூடியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்ல பயணிகள் விரும்புவதை முன் பதிவுகள் காட்டுகின்றன.
மலிண்டோ விமான நிறுவனத்திலும் முன்பதிவுகள் சூடுபிடித்துள்ளன. அதன் பொதுத் தொடர்புப் பிரிவின் இயக்குநரான ராஜா சாவ்தி அம்ரின், 30 விழுக்காட்டுக்கு மேல் விமானப் பயணங்களுக்கான பதிவுகள் கூடியிருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே சிங்கப்பூர், மலே சியா இடையிலான பொதுப்போக்கு வரத்து சேவைகள் வெள்ளிக் கிழமையிலிருந்து தொடங்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று அறிவித்தார்.
ெவள்ளிக்கிழமை அன்றுதான் இரு நாட்டின் எல்லைகள் முழுமை யாக திறக்கப்படுகின்றன. அதே நாளில் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் தொடங்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.