முழு வீச்சில் இன்றே இயங்கும் உணவகங்கள்

முழு வீச்சில் இன்றே இயங்கும் உணவகங்கள்

2 mins read
cf0c806c-7654-452b-9d91-51d0c6e15ab9
-

கி.ஜனார்த்­த­னன்

கட்­டுப்­பா­டு­க­ளின் தளர்வு குறித்து சிங்­கப்­பூ­ரின் உண­வக உரி­மை­யா­ளர்­கள், நீண்ட நாள் கனவு நிறை­வேறி இருப்­ப­தா­கத தமிழ் முர­சி­டம் தெரி­வித்­த­னர்.

கடந்த வாரம் வெளி­வந்த பிர­த­ ம­ரின் அறி­விப்­புக்­குப் பிறகு, கடந்த வார­யி­று­திக்­கான முன் ­ப­தி­வு­க­ளைச் செய்­தி­ருந்­த­வர்­கள் செவ்­வாய்க்­கி­ழ­மைக்கு பிறகு மாற்­றி­ய­தாக முத்­துஸ் கறி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் காசி விஷ்­வ­நாத் தெரி­வித்­தார்.

முன்­ப­திவு செய்­தி­ருந்­த­வர்­கள் பலர் 10 பேர் வரை தங்­க­ளது முன்­ப­தி­வு­களை மாற்­றி­ய­தா­க­வும் அவர் கூறி­னார். "முன்­னைய விதி­மு­றை­க­ளால் நாங்­கள் 25 மேசை­களை எங்­கள் கிடங்­கிற்­குக் கொண்டு சென்­றோம். அந்த மேசை­களில் 50 விழுக்­காடு மேசை­களை மீண்­டும் நம் உண வகங்க­ளுக்­குக் கொண்டு வந்து உள்­ளோம்," என்றார் அவர்.

முஸ்­லிம்­க­ளுக்­கான நோன்பு மாதம் வரு­கிற சம­யத்­தில் குடும்­பத்­தி­னர் ஒன்­றாக அமர்ந்து இரவு உணவு உண்­ப­தற்கு புதிய விதி­முறை வகை செய்­யும் என்று சகுந்­த­லாஸ் உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் மாத­வன் ஆதி­பா­ல ­கி­ருஷ்­ணன், 52, தெரி­வித்­தார்.

செவ்­வாய்க்­கி­ழ­மைக்­கான முன்­ப­திவு இத­னால் 20 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­திய காயத்­திரி உண­வக உரி­மை­யா­ளர் ச.மகேந்­தி­ரன், 10 பேர் கூட அனு­ம­திக்­கப்­படும் நிலை கிட்­டத்­தட்ட கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முந்­திய நிலையே என்று கூறி­னார். தங்­க­ளுக்­குச் சொந்­த­மான 'பாட்­டம்ஸ் அப்' கிளை­யில் இரவு 10.30 மணிக்கு மேல் மது­பா­னங்­களை அனு­ம­திக்­கப்­ப­டு­ வ­தா­லும் வர்த்­த­கம் மேன்­மே­லும் முன்­னேற்­றம் அடை­யும் என நம்­பிக்கை தெரி­வித்­தார்.

மேசை முறை­யையே மாற்றி அமைக்க வேண்டி இருந்­த­தா­க­வும் நள்­ளி­ரவு வரை உணவு மற்­றும் மது­பா­னங்­க­ளைப் பரி­மா­று­ வ­தற்­கும் ஊழி­யர்­க­ளைத் தயார்­ படுத்­தி­யுள்­ள­தா­கக் கூறிய 'தி கேவர்ன்' உரி­மை­யா­ளர் வி ராமு, 46 ஊழி­யர்­களை மேலும் சேர்க்­கத் திட்­ட­மி­டு­கி­றார்.

ஆயி­னும், வேறு சிலர், தற்­போ­தைய விதி­மு­றை­க­ளைத் தொட­ரப்­போ­வ­தா­கக் கூறி­னர். பத்து இருக்­கை­க­ளைக் கொண்ட மேசை­கள் உள்ள இடத்­திற்கே நுழைவு வசதி (point of entry) தேவைப்­ப­டு­கிறது என 'அலா­டீன்ஸ் காசல்' உண­வுக்­க­டை­யின் நிர்­வாகி கார்த்­தி­கே­யன் அரு­ண­நீதி, 36, தெரி­வித்­தார். "கண்­கா­ணிப்­பு­களை அதி­கப்­ படுத்­தத் தேவை­யான ஊழி­யர்­கள் என்­னி­டம் போதிய எண்­ணிக்­கை­யில் இல்லை," என்று அவர் கூறி­னார்.

அதி­கம் பேர் ஒன்­றாக அமர்ந்து சாப்­பி­டு­வது நல்­லது என்­றா­லும் மேசை­க­ளுக்கு இடையே தொடர்ந்து பாது­காப்பு இடை­வெ­ளியை உறுதி செய்­வது மேலும் கடி­ன­மாக இருக்­கும் என்று பாய் பிரி­யா­ணி­யின் உரி­மை­யா­ளர் காதர் முகை­தீன் தெரி­வத்­தார்.

பத்து பேருக்­கான வச­தியை தாம் தற்­போ­தைக்கு ஏற்­பாடு செய்­யப்­போ­வ­தில்லை என்­றும் ஏற்­கெ­னவே இருந்த கட்­டுப்­பா­டு­க­ளைத் தொடர்ந்து பின்­பற்றி வந்­தால் அது அனை­வ­ருக்­குமே நல்­லது என்­றும் அவர் கரு­து­கி­றார்.