அரசாங்க துணை தலைமை வழக்கறிஞராக திருவாட்டி டேஃப்னி ஹோங் நியமனம்

அரசாங்க துணை தலைமை வழக்கறிஞராக திருவாட்டி டேஃப்னி ஹோங் நியமனம்

1 mins read
d0fd7357-9873-490e-acca-e7e67d6e9699
-

சிங்­கப்­பூ­ரின் சட்­டச் சேவை ஆணை­யம், திரு­வாட்டி டேஃப்னி ஹோங்கை (படம்) அர­சாங்­க துணைத் தலைமை வழக்­க­றி­ஞ­ராக நிய­மித்­தி­ருக்­கிறது.

வரும் ஏப்­ரல் முதல் தேதி அவர் பொறுப்­பேற்­றுக்­கொள்­வார் என்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

புதிய பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட பிற­கும் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தின் அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் பிரி­வுக்­கான தலைமை இயக்கு ­ந­ரா­க­வும் அவர் தொடர்ந்து செயல்­ப­டு­வார்.

திரு­வாட்டி ஹோங், 1991ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சட்­டத்­து­றை­யில் இள­நி­லைப் பட்­டத்­தை­யும், 1995ல் முது­நி­லைப் பட்­டத்­தை­யும் பெற்ற அவர், கீழ்­நீ­தி­மன்­றத்­தில் துணை­நி­லைப் பதி­வா­ள­ரா­கப் பணி­யைத் தொடங்­கி­னார். படிப்­ப­டி­யாக நீதி­பதி, மாவட்ட நீதி­பதி ஆகிய பத­வி­களை வகித்­தார்.

2004ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்­றத்­தில் உத­விப் பதி­வா­ள­ரா­கச் சேவை­யாற்­றிய திரு­வாட்டி ஹோங், 2006ல் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தில் அனைத்­து­லக விவ­கா­ரப் பிரி­வில் அர­சாங்­கத்­தின் மூத்த துணை வழக்­க­றி­ஞ­ராக நிய­மிக்­கப்­பட்­டார். 2016ல் அந்­தப் பிரி­வின் தலைமை இயக்­கு­நர் பொறுப்பை ஏற்­றார்.

பொதுச் சேவை­யில் அவ­ரது சிறப்­பான பங்­க­ளிப்­பைப் பாராட்டி சென்ற ஆண்டு திரு­வாட்டி டேஃப்னி ஹோங்­கிற்கு பொது நிர்­வா­கத் தங்­கப் பதக்­கம் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டது.