தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாக்சி கட்டணம் ஒரு காசு உயர்த்தப்படுகிறது

2 mins read
8a90a67c-0509-4a2a-8757-88bf331c0238
-

எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கம்ஃபர்ட்டெல்குரோ தற்காலிக நடவடிக்கை; ஏப்ரல் 4 முதல் நடப்பிற்கு வருகிறது

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய டாக்சி சேவை நிறு­வ­ன­மான கம்­ஃபர்ட்­டெல்­குரோ, பய­ணத் தொலை­வுக் கட்­ட­ணத்தை தற்­கா­லி­க­மாக ஒரு காசு உயர்த்­தி­யுள்­ளது.

இந்த மாற்­றம் அடுத்த திங்­கட்­கி­ழமை முதல் நடப்­பிற்கு வர­விருக்­கிறது.

அண்­மைய வாரங்­க­ளாக எரி­பொ­ருள் விலை உயர்ந்து வரு­வ­தன் எதி­ரொ­லி­யாக இந்­தத் தற்­கா­லி­கக் கட்­டண உயர்வு நட­வடிக்கை இடம்­பெ­று­வ­தாக கம்­ஃபர்ட்­டெல்­குரோ நிறு­வ­னம் ஓர் அறிக்கை வழி­யாக நேற்று தெரி­வித்­தது.

இம்­மா­தம் 1ஆம் தேதி முதல் டாக்சி பய­ணக் கட்­டண உயர்வை அந்­நி­று­வ­னம் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போ­தைக்கு, பய­ணத் தொலைவு மற்­றும் காத்­தி­ருப்பு நேரக் கட்­ட­ணங்­க­ளா­னது வழக்­க­மான கம்­ஃபர்ட் டாக்­சி­க­ளுக்கு 24 காசாகவும் 'லிமோ­சின்' டாக்சி­களுக்கு 33 காசாகவும் இருக்­கின்­றன.

இந்­நி­லை­யில், வரும் ஏப்­ரல் 4ஆம் தேதி­யி­லி­ருந்து இந்­தக் கட்­ட­ணங்­கள் முறையே 25 காசாக­வும் 34 காசாகவும் உய­ரும்.

முதல் பத்து கிலோ­மீட்­டர் தொலை­விற்கு ஒவ்­வொரு 400 மீட்­ட­ருக்­கும் அதன்­பின் ஒவ்­வொரு 350 மீட்­ட­ருக்­கும் ஒவ்­வொரு 45 நொடி­கள் அல்­லது அதற்­குக் குறை­வான காத்­தி­ருப்பு நேரத்­திற்­கும் இந்­தக் கட்­ட­ணம் பொருந்­தும்.

இந்­தத் தற்­கா­லி­கக் கட்­டண உயர்­வால் பத்து கிலோ­மீட்­டர் தொலைவு டாக்­சி­யில் பய­ணம் செய்­வ­தற்­குக் கூடு­த­லாக 32 காசு செல­விட வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் கம்­ஃபர்ட்­டெல்­குரோ குறிப்­பிட்டது.

இத­னை­ய­டுத்து, நாளொன்­றுக்கு 10 முதல் 12 பய­ணங்­களை மேற்­கொள்­ளும் கம்­ஃபர்ட்­டெல்­குரோ டாக்சி ஓட்­டு­நர்­கள் கூடு­த­லாக $3.20 முதல் $3.84 வரை வரு­மானம் ஈட்­டு­வர்.

இது அவர்­கள் எரி­பொ­ரு­ளுக்­கா­கக் கூடு­த­லா­கச் செல­வ­ழிக்­கும் தொகை­யைச் சற்­றுக் குறைக்க உத­வும். கடந்த மாதத்­தில் அவர்­கள் எரி­பொ­ரு­ளுக்­காக நாளொன்­றுக்கு $3.55 முதல் $13.50 வரை கூடு­த­லா­கச் செல­வ­ழிக்க வேண்டி­ இ­ருந்­தது என்று கம்­ஃபர்ட்­டெல்­குரோ கூறி­யது.

ஓட்­டு­நர்­க­ளின் கருத்­து­களை அறிந்­த­பின், கவ­ன­மான பரி­சீ­ல­னைக்­குப் பிறகே இந்­தத் தற்­கா­லி­கக் கட்­டண உயர்வு அறி­மு­கப்­படுத்­தப்­பட இருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

அத்­து­டன், இவ்­வாண்டு மே மாத இறு­தி­யில் இந்­தத் தற்­கா­லிகக் கட்­டண உயர்வு குறித்து மறு­ஆய்வு செய்­யப்­படும் என்­றும் எரி­பொ­ருள் விலை குறைந்­தால் அது மீட்­டுக்­கொள்­ளப்­படும் என்­றும் கம்­ஃபர்ட்­டெல்­குரோ தெரி­வித்து இருக்­கிறது.

எரி­பொ­ருள் விலை உயர்­வைச் சமா­ளிக்க தன் ஓட்­டு­நர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் வகை­யில், $90 மதிப்­பி­லான ஒரு­முறை வாட­கைக் கழிவை மேலும் நீட்­டிப்­ப­தா­க­வும் அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ளது.

முன்­ன­தாக, எரி­பொ­ருள் விலை உயர்வு கார­ண­மாக குறைந்­தது மூன்று தனி­யார் வாடகை கார் சேவை வழங்­கு­நர்­களும் தற்­கா­லி­க­மாக ஓட்­டு­நர் கட்­டண உயர்­வுத் திட்­டங்­களை அறி­வித்­தி­ருந்­தன.

கிராப் நிறு­வ­னம், ஸ்டாண்­டர்ட் டாக்சி சேவை தவிர்த்து தனது அனைத்­துச் சேவை­க­ளுக்­கும் 50 காசு கட்­டண உயர்வை அறி­வித்­துள்­ளது. இந்­தத் தற்­கா­லிக உயர்வு ஏப்­ரல் 1 முதல் மே 31 வரை நடப்­பி­லி­ருக்­கும்.

அது­போல, 'தடா', 'கோஜெக்' நிறு­வ­னங்­களும் 50 முதல் 80 காசு வரை கட்­ட­ணங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக உயர்த்தி அறி­வித்­துள்­ளன.