செலவுகளைச் சமாளிக்க நிறுவனங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே ஆதரவு வழங்க வேண்டுமா என்பது குறித்து மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாகவும் கூடுதல் உதவி தேவைப்படுமா என்பது பற்றி ஆராய அதிக காலம் தேவை எனும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
நிச்சயமற்ற உலகச் சூழலுக்கு இடையே சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொள்வதால் அவற்றுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
உக்ரேன் நெருக்கடியையும் அது பொருளியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நிலைமை மோசமானால் சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஸ்டாம்ஃபர்ட் சாலையில் உள்ள கேப்பிட்டல் அரங்கில் லியான்ஹ சாவ்பாவ் நாளேடு நேற்று ஏற்பாடு செய்திருந்த வரவுசெலவுத் திட்டம் 2022 வர்த்தகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் வோங் இதனைத் தெரிவித்தார்.

