நிபுணர்கள் விளக்கம்: உயிர்மாய்ப்பு குறித்த எச்சரிக்கை அறிகுறிகளும் உதவும் வழிகளும்

நிபுணர்கள் விளக்கம்: உயிர்மாய்ப்பு குறித்த எச்சரிக்கை அறிகுறிகளும் உதவும் வழிகளும்

2 mins read
941471fc-b3db-4a9c-88d2-df0e59b3b0da
-

நண்­பர் அல்­லது அன்­புக்­கு­ரி­ய­வர் ஒரு­வர் தமது உயிரை மாய்த்­துக்­கொள்­வது பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், அதனைப் பல்­வேறு எச்­ச­ரிக்கை அறி­கு­றி­கள் காண்­பித்து­வி­டும் என்று மன­ந­லக் கழ­கத்­தின் அவ­சர, நெருக்­க­டி­கா­லப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் தலை­வ­ரும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான டாக்­டர் ஜேரட் இங் தெரி­வித்­துள்­ளார்.

தங்­க­ளால் இனி­யும் வாழ முடி­யாது அல்­லது வாழ விருப்­ப­மில்லை எனச் சமூக ஊட­கங்­களில் பதி­வி­டு­வது அல்­லது உய­ர­மான கட்­ட­டங்­களில் பிறர் நின்­றி­ருப்­பது போன்ற படங்­க­ளைத் திடீ­ரெ­னப் பதி­வேற்­றம் செய்­வது உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

அத்­து­டன், உயிரை மாய்த்­துக்­கொள்­வது பற்­றிச் சிந்­திப்­ப­வர் விடை­பெ­று­வது போன்ற கடி­தங்­களை எழுதி அனுப்­ப­லாம் அல்­லது இது­நாள்­வரை அரும்­பொ­ரு­ளா­கத் தாங்­கள் பாது­காத்து வந்­த­வற்­றைப் பிற­ருக்கு அளிக்­க­லாம்.

"குடும்­பத்­தி­ன­ரா­லும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளா­லும் மட்­டுமே இத்­த­கைய அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­க­ளுக்கு உதவ முடி­யும்," என்றார் டாக்­டர் இங்.

மன­ந­லக் கழ­க­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் இணைந்து, மன­நலம் தொடர்­பில் நடத்­தி­வ­ரும் இணை­ய­வ­ழிக் கருத்­த­ரங்­குத் தொட­ரில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

நிபு­ணத்­து­வப் பயிற்சி இல்­லாத பாம­ரர்­களும் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் எண்­ணத்­தில் இருக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் அன்­புக்­கு­ரி­ய­வர்­களுக்­கும் உதவ முடி­யும் என்­றார் தாய்­லாந்து பொதுச் சுகா­தார அமைச்­சின் சோம்­தத் சாவ்­பி­ராயா உள­வி­யல் கழ­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் பட்­ட­னோன் குவான்­ச­னித்.

"அக்­கறை கொள்­ளுங்­கள், பரிவு காட்­டுங்­கள், உரிய உதவி அல்­லது சிகிச்­சையை நாடு­மாறு நண்­ப­ருக்கு ஆலோ­சனை கூறுங்­கள்," என்­றார் டாக்­டர் குவான்­ச­னித்.

நிலைமை அவ­ச­ரம் எனில் காவல்­து­றை­யி­ன­ரின் உத­வியை நாட­லாம் என்று டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

காவல்­து­றை­யி­னர் விரைந்து செயல்­பட்டு, சம்­பந்­தப்­பட்­ட­வ­வ­ருக்கு உரிய அமைப்­பின் உதவி கிடைக்­கும்­படி செய்­யக்­கூ­டும்.

மற்ற உலக நாடு­க­ளைப்­போல, சிங்­கப்­பூ­ரி­லும் வெவ்­வேறு வய­துப் பிரி­வி­ன­ரைப் பொறுத்து, உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தற்­கான முக்­கி­யக் கார­ணங்­கள் வெவ்­வே­றாக உள்­ளன என்­றார் டாக்­டர் இங்.

இளை­யர்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், உற­வு­முறை மற்­றும் அடை­யாளம் சார்ந்த பிரச்­சி­னை­கள் முக்­கி­யக் கார­ணங்­க­ளாக விளங்­கு­கின்­றன. குடும்­பப் பிரச்­சி­னை­களால் அல்­லது திரு­ம­ணம் சார்ந்து தங்­க­ளின் பெற்­றோ­ருக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­க­ளா­லும் அவர்­களுக்கு மனஅழுத்தம் ஏற்­ப­ட­லாம்.

பெரி­ய­வர்­க­ளைப் பொறுத்­த­மட்டில், உற­வு­முறை, நிதி அல்­லது வேலை தொடர்­பான பிரச்­சி­னை­களே உயிர்­மாய்ப்­பிற்­கான முக்­கியக் கார­ணங்­க­ளாக இருக்­கின்­றன. தனிமை, செயல்­பட முடி­யாமை, முது­மைக்­கால நோய்­கள் போன்ற கார­ணங்­க­ளால் முதி­ய­வர்­களும் உயிரை மாய்த்­துக்­கொள்­வது பற்றிச் சிந்­திக்­கக்­கூ­டும்.

உல­க­ளா­விய தர­வு­க­ளின்­படி, உயிர்­மாய்ப்பு முயற்­சி­யில் இறங்­கு­வோ­ரில் கிட்­டத்­தட்ட 60 விழுக்­காட்­டி­னர் ஏதோ ஒரு வேகத்­தில் அவ்­வாறு செய்­யத் துணி­வ­தா­க­வும் எஞ்­சிய 40 விழுக்­காட்­டி­னர் திட்­ட­மிட்டு உயிரை மாய்த்­துக்­கொள்ள முயல்­வ­தா­க­வும் டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ருக்­கெ­னப் பிரத்­தி­யே­க­மாக அத்­த­கைய தர­வு­கள் ஏதும் இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

உயிர்­மாய்ப்­பைத் தடுக்க, பல்­வேறு நிலை­களில் பல நட­வ­டிக்­கை­கள் ஏற்­கெ­னவே நடப்­பில் இருந்து வரு­வ­தை­யும் டாக்­டர் இங் சுட்டிக்காட்டினார்.

பள்ளி சார்ந்த உள­வி­யல் நல்­வாழ்வு மற்­றும் திறன் பயிற்­சித் திட்­டங்­கள், இட­ரில் உள்­ளோரை அடை­யா­ளம் காண்­ப­தற்­கான பரி­சோ­த­னை­கள், பொது விழிப்­பு­ணர்­வுப் பிர­சா­ரங்­கள், உதவி அழைப்பு எண்­கள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.