சிங்கப்பூரில் புதிதாக 4,925 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
தொற்றுப் பாதிப்பால் 717 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 25 பேர் உள்ளனர்.92 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 112 பேருக்கு தொற்று உறுதியானது.
வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் தொடர்ந்து 27வது நாளாக 1க்குக்கீழ் உள்ளது. அது 0.73ஆக இருந்தது.
மார்ச் 28ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 1,076,930 தொற்றுச் சம்பவங்களும், 1,254 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.