சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் புதிய செயலி

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் புதிய செயலி

2 mins read
a999ef1f-3e64-4a5e-852a-f26f42a50c78
-

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி நிறு­வப்­பட்டு மூன்று ஆண்­டு­கள் நிறை­வ­டை­கின்­றன. இதனை முன்­னிட்டு கைபே­சிச் செயலி ஒன்றை அக்­கட்சி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. கட்சி ஆற்­றும் பணி­

க­ளைப் பற்றி சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கு எடுத்­து­ரைக்க புதிய செய­லியை அது தொடங்­கி­யுள்­ளது.

அடுத்த பொதுத் தேர்­த­லில் கூடு­தல் தொகு­தி­களை வெல்­லும் இலக்­கு­டன் சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி செயல்­பட்டு வரு­கிறது. அக்­கட்சி வளர மும்­முனை உத்­தி­மு­றையை அதன் தலை­மைச் செய­லா­ளர் ஃபிரான்­சிஸ் யுவென் கோடிட்­டுக் காட்­டி­னார். நாடா­ளு ­மன்­றத்­தில் அக்­கட்­சி­யைச் சேர்ந்த இரண்டு தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் செயல்­பாடு, வீட்­டுக்கு வீடு சென்று குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைச் சந்­திப்­பது ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற கட்­சிப் பொதுக்கூட்­டத்­தில் இவை­கு­றித்து திரு யுவென் பேசி­னார்.

கட்சி உறுப்­பி­னர்­கள் இணை­யம் மூலம் பொதுக்கூட்­டத்­தில் பங்­கெ­டுத்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பொதுத் தேர்­தல் திடீ­ரென்று அறி­விக்­கப்­பட்­டா­லும் அதற்கு சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி தயா­ராக இருக்க வேண்­டும் என்று தமது கட்சி உறுப்­பி­னர்­

க­ளி­டம் திரு யுவென் வலி­யு­றுத்­தி­னார்.

"இப்­போது நமது கட்­சிக்கு இரண்டு தொகு­தி­யில்லா நாடாளு ­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். அடுத்த பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு கூடு­தல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நமது கட்சி கொண்­டி­ருக்க வேண்­டும்.

கடந்த பொதுத் தேர்­த­லில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி­ யில் போட்­டி­யிட்ட சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் குழு நூலி­ழை­யில் தோற்­றது. அக்­கு­ழு­வைச் சேர்ந்த திரு லியோங் மன் வாயும் திரு­வாட்டி ஹேசல் புவா­வும் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பொதுத் தேர்­தல் 2025ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­துக்­குள் நடத்­தப்­பட வேண்­டும்.