ஆண்டர்சன்ஸ் ஆஃப் டென்மார்க் பனிக்கூழ் கடைகளின் வாடிக்கையாளர்களுடைய தரவு கசிந்திருக்கக்கூடும் என்று அக்கடைகளை நடத்தும் ஜார்ஜஸ் நிறுவனம் சந்தேகப்படுகிறது. இதையடுத்து, அதன் இணையப்பக்கத்தின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த அது நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆண்டர்சன்ஸ் ஆஃப் டென்மார்க்கின் வாடிக்கையாளர்களிடம் மோசடிக்காரர்கள் போலி மின்னஞ்சல்களை அனுப்பியதாக அறியப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு குறித்து கிட்டத்தட்ட 100 முழுநேர ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க ஜார்ஜஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களை அடையாளம் காண்பது, அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற விவரங்கள் ஊழியர்
களுக்குக் கற்றுத்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இணையம் வழி வர்த்தகம் செய்யும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வரும் ஜார்ஜஸ் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் இணையப் பாதுகாப்பு தொடர்பான அறிமுகத் திட்டத்தில் பங்கெடுத்தது.
அத்திட்டத்தை தொடர்பு, தகவல் துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தொடங்கிவைத்தார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையத்தின்கீழ் இந்த இணையமுத்திரைத் திட்டம் நடத்தப்படுகிறது. தரமான இணையப் பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களை இத்திட்டம் அடையாளம் காண்கிறது. முக்கிய தகவல் உள்கட்டமைப்பு இல்லாத நிறுவனங்
களுக்கு இந்த முத்திரை வழங்கப்படும். நீர், எரிசக்தி ஆகிய துறைகளைப் போல முக்கிய தகவல் உள்கட்டமைப்பு உள்ள அமைப்புகள், இதைவிட உயர்தரப் பாதுகாப்பைப் பெற்றிருக்க
வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது.

