மருத்துவரிடம் விசாரணை; மக்கள் நலன் காக்க நடவடிக்கை

மருத்துவரிடம் விசாரணை; மக்கள் நலன் காக்க நடவடிக்கை

1 mins read
3ba44efc-e8a9-43bc-9d27-a9729a296c0f
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­க­வும் கிரு­மித்­தொற்­றைத் தடுக்­க­வும் மருத்­து­வர் ஒரு­வர் 'இவர்­மெக்­டின்' எனும் மருந்தை நோயா­ளி­க­ளுக்குக் கொடுத்து வந்­த­தா­க­வும் அதைப் பயன்­ப­டுத்த ஊக்­க­வித்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு சிங்­கப்­பூர் மருத்­துவ மன்­றம் முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது. தனி­யார் மருத்­து­வ­ரான டாக்­டர் யாங் இங் வெய்­யின் நடத்தை குறித்து மன்­றம் விசா­ரணை நடத்­து­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­காக டாக்­டர் யாங் 'இவர்­மெக்­டின்' மருந்தை நோயா­ளி­க­ளுக்­குத் தரு­வ­தாக கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 25ஆம் தேதி­யன்று சுகா­தார அமைச்­சி­டம் புகார் செய்­யப்­பட்­டது.

மருத்­து­வச் சேவை வழங்க

டாக்­டர் யாங்­கிற்குக் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி­யி­லி­ருந்து 18 மாதங்­க­ளுக்கு அல்­லது விசா­ரணை நிறை­வ­டை­யும் வரை இடைக்­கா­லத் தடை விதிப்­பது அவ­சி­யம் என்று இடைக்­கால ஆணைக் குழு முடி­வெ­டுத்­தது.

பொது­மக்­க­ளின் நலனைக் காக்கவும் அவர்களைப் பாது காக்கவும் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக குழு கூறி­யது.

எதிர்­கா­லத்­தில் மருத்­து­வ­ரா­கத் தொடர்ந்து செயல்­பட அனு­ம­திக்­கப்­பட வேண்டு­மா­யின் தற்­போது விதிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கா­லத் தடைக்கு டாக்­டர் யாங் உட்­பட்டு அதன்படி நடந்­து­கொள்ள வேண்­டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.