தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு இளையர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
07b7a497-bb81-4fc3-9f45-120635d60a8b
-

வீட்­டில் குழாய் வெடி­குண்டு தயாரித்த இரண்டு இளை­யர்­கள் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. ஒரு­வர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வர், மற்­ற­வர் முழு­நேர தேசி­யச் சேவையாளர்.

ஆயு­தம் மற்­றும் வெடி­பொ­ருள் சட்­டத்­தின்­கீழ், 19 வய­தான அவ்­வி­ரு­வர் மீது குற்­றம் சாட்­டப்­பட்டுள்ளது.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வர் மீது மொத்­தம் ஏழு குற்­றச்­சாட்­டு­களும், முழு­நேர தேசி­யச் சேவை­யா­ள­ருக்கு எதி­ராக ஆறு குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­பட்­டு உள்­ளன.

2017ஆம் ஆண்­டுக்­கும் 2020ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அந்த இரு­வ­ரும் பல நாட்டு வெடி­பொ­ருள்­க­ளைத் தயா­ரித்து அவற்றை வெடிக்­க­வும் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது. இவற்றை அவர்­கள் தங்­கள் வீடுகளி­லும், வெளிப்­பு­றத்­தி­லும் செய்­த­தா­கத் தெரி­கிறது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர்­கள் இரு­வ­ரும் ஒரு குழாய் வெடி­குண்­டைத் தயாரித்து, அதை ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் வெடிக்­கச் செய்ததாகக் கூறப்­பட்­டது.

குற்­றங்­கள் புரிந்­த­போது அவர்­க­ளுக்கு 18 வய­துக்­குக் குறை­வாக இருந்­த­தால், அவர்களின் பெயர்­கள் வெளியிடப்பட மாட்டா.

ஆயு­தம் மற்­றும் வெடி­பொ­ருள் சட்­டத்­தின்­கீழ், ஒவ்­வொரு குற்றச்­சாட்­டுக்­கும் மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்டனை­யும், $10,000 வரை அபரா­த­மும் விதிக்கப்­ப­ட­லாம்.