மரண தண்டனைக்கு எதிரான மலேசியரின் மேல்முறையீடு நிராகரிப்பு

மரண தண்டனைக்கு எதிரான மலேசியரின் மேல்முறையீடு நிராகரிப்பு

2 mins read
e4a5da84-29c0-44a1-b2df-0aa8a738ca6c
மனநல மருத்துவர்களைக் கண்டறிய நேரம் வேண்டிய நாகேந்திரனின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

போதைப் பொருள் கடத்­திய குற்­றத்­துக்­காக மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட மலே­சி­ய­ரின் சீராய்வு மனுவை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று நிரா­க­ரித்­தது.

மலே­சி­ய­ரான திரு நாகேந்­தி­ரன் தர்­ம­லிங்­கம் தாம் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்­டிய மன­நிலை­யில் இல்லை என்­றும் இது குறித்து உள­வி­யல் மருத்­து­வர் குழு தம்­மைப் பரி­சோ­திக்க வேண்­டும் என்­றும் நீதி­மன்­றத்­தில் முறை­யிட்­டி­ருந்­தார். அது­வரை தமது மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு தடை விதிக்க வேண்­டு­மென்­றும் மனுச் செய்­தி­ருந்­தார்.

இதை தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் அடங்­கிய ஐந்து நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு நேற்று நிர­க­ரித்து தீர்ப்­ப­ளித்­தது.

திரு நாகேந்­தி­ர­னின் மனு சட்ட அடிப்­ப­டை­யி­லும், வழக்கு விவரங்களின் அடிப்­ப­டை­யி­லும் விசா­ர­ணைக்கு தகு­தி­யில்­லா­தது என்று நீதி­மன்­றம் கூறி­யது.

இவர் சார்­பில் வாதா­டிய திரு­வாட்டி வைலட் நெட்டோ என்ற வழக்­க­றி­ஞர், 33 வயது திரு நாகேந்­தி­ரன் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர் என்­றும் அத­னால் அவர்­மீ­தான மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படக் கூடாது என்­றும் வாதிட்­டார்.

இதற்கு பதி­ல­ளித்த தலைமை நீதி­பதி, அவ­ரு­டைய மன­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறு­வ­தற்கு எவ்­வித சாட்­சி­ய­மும் இல்லை என்­றார்.

திரு நாகேந்­தி­ர­னின் மன­நிலை குறித்து அவ­ரு­டைய முன்­னாள் வழக்­க­றி­ஞர் திரு ரவி­யின் பிர­மாண வாக்­கு­மூ­லம் மட்­டுமே உள்­ள­தா­கத் தெரி­வித்­தார். திரு ரவி­யின் பிர­மாண வாக்­கு­மூ­லத்­தில் திரு நாகேந்­தி­ர­னின் மன­நிலை 18 வய­துக்­கும் கீழே உள்ள ஒரு­வ­ரின் மன­நி­லையை ஒத்­தி­ருப்­ப­தாக கூறப்­பட்­டி­ருந்­தது.

திரு நாகேந்­தி­ரனை கடந்த நவம்­பர் மாதம் 2ஆம் தேதி அரை­மணி நேரம் மட்­டுமே சந்­தித்த அடிப்­ப­டை­யில் திரு ரவி அவ­ருக்கு மன­நிலை சரி­யில்லை என்ற முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றார் என்று குறிப்­பிட்ட நீதி­ப­தி­கள், அதற்கு எவ்­வித அடிப்­படை ஆதா­ர­மும் இல்லை என்று தெரி­வித்­த­னர்.

மேலும், திரு நாகேந்­தி­ரனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5, நவம்­பர் 3ஆம் தேதி­களில் பரி­சோ­தித்த மருத்­து­வர்­க­ளின் அறிக்­கை­களை நீதி­மன்­றத்­தில் சமர்­ப்பிப்­ப­தற்கு திரு ரவி ஆட்­சே­பணை தெரி­வித்­த­தை­யும் நீதி­ப­தி­கள் சுட்­டி­னர்.

திரு நாகேந்­தி­ர­னின் மன­நிலை பற்­றிக் கேள்வி எழுப்­பி­யுள்ள நிலை­யில் அது தொடர்­பான மருத்­துவ ஆவ­ணங்­களை பரி­சீ­லிக்க ஆட்­சே­பம் தெரி­விப்­பதை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடி­யும் என்­றும் நீதி­ப­தி­கள் வின­வி­னர்.

2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் ஹெரா­யின் போதைப்­பொ­ரு­ளைக் கடத்­தி­ய­தாக நாகேந்­தி­ரன் கைது­செய்­யப்­பட்­டார்.