சிங்கப்பூரில் புதிதாக 8,164 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஒப்புநோக்க, திங்கள்கிழமை நிலவரப்படி 4,925 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாரயிறுதிகளில் பலரும் சமூக ஒன்றுகூடல்களுக்குச் செல்வதால், பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் தொற்றுச் சம்பவஙகள் மற்ற நாள்களைவிட அதிகமாக பாதிவாகின்றன.
தொற்றுப் பாதிப்பால் 725 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 25 பேர் உள்ளனர். 83 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 155 பேருக்கு தொற்று உறுதியானது.
வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் தொடர்ந்து 28வது நாளாக 1க்குக்கீழ் உள்ளது. அது 0.69ஆக இருந்தது.
மார்ச் 29ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 1,085,094 தொற்றுச் சம்பவங்களும், 1,258 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.