அமைச்சர்: நீண்டகாலப்போக்கில் செயல்படும் அதிகாரிகள்; உரிய நேரத்தில் அறிவிப்பு ஒளிமய சூழல்; தொடர்ந்து முனையம் 5 மறுபரிசீலனை

அமைச்சர்: நீண்டகாலப்போக்கில் செயல்படும் அதிகாரிகள்; உரிய நேரத்தில் அறிவிப்பு ஒளிமய சூழல்; தொடர்ந்து முனையம் 5 மறுபரிசீலனை

2 mins read
577ab6e5-cd24-4ce8-873a-e8486ea5fe90
போக்கு வரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சாங்கி விமான நிலை யத்தைப் பார்வை யிட்டார். அவர் ஊழியர் களுடன் படம் எடுத்துக் கொண்டார். படம்: சாவ் பாவ் -

சிங்­கப்­பூ­ரில் நீண்­ட­கால கண்­ணோட்­டத்தைக் கருத்­தில்­கொண்டு சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 5ஐ பெரிய அள­வில் உரு­வாக்­கு­வதற்­கான திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு இருக்­கின்­றன.

கொவிட்-19 கார­ண­மாக பின்­னடைவு இருந்­தா­லும் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து தொடர்ந்து அதி­கரிக்­கும் என்­பதே சிங்­கப்­பூ­ரின் கணிப்பாக இருக்­கிறது என போக்கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று தெரி­வித்­தார்.

ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தி­லும் இந்­தப் போக்கு நில­வும் என்று தெரி­ய­வ­ரு­வ­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார். அதி­கா­ரி­கள் நீண்­ட­கால கண்­ணோட்­டத்­தில் செயல்­படு­கி­றார்­கள். உரிய நேரத்­தில் அவர்­கள் அறி­விப்பு விடுப்­பார்­கள் என்று அமைச்­சர் கூறினார்.

முனை­யம் 5 கட்­டு­மா­னப் பணி கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டு இரண்­டாண்­டு­கள் ஆகும் நிலை­யில் அமைச்­ச­ரின் கருத்து இடம்­பெற்று உள்­ளது.

கொவிட்-19 தொற்றுக் கார­ண­மாக விமா­னப் போக்­கு­வ­ரத்து தொழில்­துறை எப்­படி ஆகும் என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

இந்­தச் சூழ­லில் முனை­யம் 5ன் கட்­டு­மா­னம் குறைந்­த­பட்­சம் இரண்­டாண்­டு­கள் நிறுத்தி வைக்­கப்­படும் என்று கடந்த 2020ல் அப்­போ­தைய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் அறிவித்து இருந்­தார்.

விமா­னப் போக்­கு­வ­ரத்து தொழில்­துறை எப்­படி பரி­ண­மிக்­கும் என்­பதை அர­சாங்­கம் ஆரா­யும் என்­றும் புதிய பாது­காப்பு நிபந்­தனை­களை எல்­லாம் கருத்­தில் கொண்டு முனை­யம் 5ன் வடி­வமைப்பு மாற்­றப்­படும் என்­றும் திரு கோ தெரி­வித்து இருந்­தார்.

முனை­யம் 5 வரும் 2030ல் கட்டி முடிக்­கப்­படத் திட்­ட­மி­டப்­பட்­டது. அது ஏறத்­தாழ 667 காற்­பந்துத்திடல் அள­வுக்­குப் பெரி­ய­தாக இருக்­கும்.

தொடக்­கத்­தில் அது ஆண்டு ஒன்­றுக்கு 50 மில்­லி­யன் பய­ணிகள் வரை கையா­ளும். இது ஒரு­பு­றம் இருக்க, 2வது முனை­யமும் மேம்­படுத்­தப்­ப­டு­கிறது.

இது­வும் சேர்ந்து சாங்கி விமான நிலை­யம் ஆண்டு ஒன்­றுக்கு ஏறத்­தாழ 140 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையா­ளும் ஆற்­ற­லைப் பெற்­றி­ருக்­கும். முனை­யம் 2ன் மேம்­பாட்­டுப் பணி­கள் சென்ற இரண்­டாண்­டு­களில் குறிப்­பிட்ட அள­வுக்கு நடந்து இருக்­கின்­றன.

பய­ணி­கள் குறைந்­து­விட்­ட­தால் 2020 மே மாதம் அந்த முனை­யம் மூடப்­பட்­டது. அது இந்த ஆண்­டில் படிப்­ப­டி­யா­கத் திறக்­கப்­பட்­டு­வி­டும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் முனை­யங்­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டு­வது பல்­வேறு இதர சூழ்­நி­லை­க­ளை­யும் பொருத்­தி­ருக்­கும் என்­றார் அவர்.