சிங்கப்பூர்-மலேசியா பேருந்து: மேலும் கால அவகாசம் தேவை

சிங்கப்பூர்-மலேசியா பேருந்து: மேலும் கால அவகாசம் தேவை

1 mins read
391abb2b-97fd-45fb-bdc9-0337c88b53c1
-

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் எல்­லைக் கட்­டுப்­பாடுகள் ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் தளர்த்­தப்­படும்.

என்­றா­லும்­கூட, இரு நாடு­களுக்­கும் இடை­யில் பேருந்து சேவை­யைத் துரி­தப்­ப­டுத்த மேலும் கால அவ­கா­சம் தேவை என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று தெரி­வித்­தார்.

இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யில் நிலப்­ போக்குவரத்தை வேகப்­படுத்து­வ­தற்கு முன்­ன­தாக நில­வரங்­களை மதிப்­பி­ட­வேண்­டும்.

இதற்கு அதி­கா­ரி­க­ளுக்­குக் கால அவ­கா­சம் தேவை என்று அமைச்­சர் கூறி­னார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட நிலப் போக்குவரத்து முறை­யின் பெரும் பகுதி கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­கா­லம் பெரும்­பா­லும் பயன்­ப­டுத்­தப்­ப­டா­ம­லேயே இருந்­து­ வந்­துள்­ளதை திரு ஈஸ்­வரன் ஒரு பேட்­டி­யில் சுட்­டி­னார்.

"நிலப் போக்­கு­வ­ரத்து இணைப்பை மேம்­ப­டுத்த முய­லும்­போது சர­ள­மான போக்­கு­வ­ரத்தை ­உ­றுதி செய்­ய­வேண்­டும். இதற்கு நீண்ட நெருங்­கா­லம் பிடிக்­காது.

"என்­றா­லும் போதிய அள­வுக்கு கால அவ­கா­சம் தேவைப்­படும்," என்று திரு ஈஸ்­வ­ரன் விளக்­கினார்.

கொவிட்-19க்கு எதி­ராக முழுமை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மக்­கள், கொவிட்-19 பரிசோ­தனை, தனிமை உத்­த­ர­வின்றி சிங்­கப்­பூ­ருக்­கும் மலேசி­யா­வுக்­கும் இடை­யில் வரும் வெள்­ளிக்­கி­ழமை முதல் போய்­ வ­ர­லாம்.

அவர்­கள் 'விடி­எல்' என்­படும் தனிப்­பட்ட பய­ணப்­பா­தைத் திட்ட பேருந்துக­ளை­ப் பயன்­ப­டுத்த வேண்­டாம்.

பொதுப் பேருந்து சேவை­கள் பற்றி கருத்துக் கூறிய அமைச்­சர், பொதுப் போக்­கு­வ­ரத்து சேவை நடத்­து­வோர், சேவை­களை அம லாக்க ஆயத்­த­மா­வ­தன் தொடர்­பில் இப்­போது நிலப் போக்கு­வரத்து ஆணை­யம், போக்கு­வரத்து அமைச்­சு­ ஆகியவற்றுடன் செயல்­பட்­டு­ வரு­வ­தா­கக் கூறி­னார்.