கடல் கொள்ளை ஒடுங்க சிங்கப்பூர் மறுஉறுதி

கடல் கொள்ளை ஒடுங்க சிங்கப்பூர் மறுஉறுதி

1 mins read
8cf8f066-bc27-4b0d-a263-1f96a846f0d5
-

ஆசி­யா­வில் கடற்­கொள்ளை, ஆயு­த­பாணி கொள்­ளை­களை ஒடுக்­கு­வ­தற்­கான அனைத்­து­லக ஒத்­து­ழைப்­பில் தனது கடப்­பாட்டை சிங்­கப்­பூர் மறு­உ­று­திப்­படுத்தி இருக்­கிறது.

இதற்கு வகை செய்­யும் ஓர் உடன்­பாடு கையெ­ழுத்­தாகி இருப்­ப­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து மேலும் ஐந்­தாண்­டிற்குச் சிங்­கப்­பூர் கடற்­கொள்ளை, ஆயு­த­பாணி கொள்ளைகளைத் துடைத்­தொழிக்க அனைத்­து­லக அள­வில் சேர்ந்து செயல்­படும்.

உடன்­பாடு 2022 ஏப்­ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை செல்­லு­ப­டி­யா­கும்.

உடன்­பாட்­டில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ர­னும் ஆசியா­வில் கடற்­கொள்ளை, ஆயு­த­பாணி கொள்­ளைக்கு எதி­ரான வட்­டார ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டு அமைப்­பின் தக­வல் பகிர்வு நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நரான மசா­ஃபுமி குரோக்­கி­யும் கையெ­ழுத்­திட்­ட­னர்.