'ஆசிய பசிபிக்குடன் அமெரிக்கா உறவை வளர்த்துக்கொள்ளும் என்று சிங்கப்பூர் நம்புகிறது'

'ஆசிய பசிபிக்குடன் அமெரிக்கா உறவை வளர்த்துக்கொள்ளும் என்று சிங்கப்பூர் நம்புகிறது'

2 mins read
6ef6ebfd-e145-4754-98f3-a5796da4305a
செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் லீ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பல பணி­களில் ஈடு­பட்­டி­ருந்­தா­லும் அமெ­ரிக்கா, ஆசிய பசி­பிக் நாடு­களு­ட­னான உறவை வளர்த்­துக்­கொள்­ளும் என்று சிங்­கப்­பூர் நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­கப் பிர­தமர் லீ கூறி­யுள்­ளார். வாஷிங்டனில் நேற்று முன்தினம் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னைச் சந்­தித்­த­போது அவர் அவ்­வாறு சொன்­னார்.

உக்­ரே­னில் நில­வி­வ­ரும் நெருக்­க­டி­யைக் கையாள்­வ­தில் தமது அர­சாங்­கம் கவ­னம் செலுத்தி வந்­தா­லும் இந்தோ-பசி­பிக் வட்­டாரத்­துக்­கான திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தி­லும் அது ஈடு­பாடு காண்­பித்து வரு­வ­தா­க திரு பைடன் குறிப்­பிட்­டார். வாஷிங்­டனில் நடை­பெ­ற­வுள்ள சிறப்பு மாநாடு ஒன்­றில் விரை­வில் ஆசி­யான் தலை­வர்­க­ளைச் சந்­திக்க ஆவ­லு­டன் இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார். அதைப் பிரதமர் லீ வரவேற்றார்.

"ஆசி­யான்-அமெ­ரிக்க சிறப்பு மாநாட்டை விரை­வில் இங்கு அவர் (வாஷிங்­டன்) நடத்த விரும்புவதை நாங்­கள் வர­வேற்­கி­றோம். தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்­கும் ஆசி­யானுக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிப்­பதில் அமெ­ரிக்­கா­வின் ஈடு­பாட்டை இது வலு­வான முறை­யில் எடுத்துக்­காட்­டு­கிறது," என்று பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

தங்­க­ளின் சந்­திப்­பின் தொடக்­கத்­தில் இரு தலை­வர்­களும் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னர். ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வின் ஈடு­பாடு குறித்து இரு­வ­ரும் கலந்­து­பே­சி­னர்.

உலக விவ­கா­ரங்­க­ளைப் பொறுத்­த­வரை முக்­கி­ய­மான தரு­ணத்­தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளதை அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெடுத்­தி­ருப்­பது, ஐரோப்பா, இந்தோ-பசி­பிக் ஆகிய இரு வட்­டா­ரங்­க­ளும் உட­ன­டி­யா­கக் கையா­ள­வேண்­டிய மிரட்­ட­லாக அமைந்­துள்­ளது என்று திரு பைடன் சொன்­னார்.

"ஆதிக்­கம் செலுத்தி எல்­லை­களை மாற்­ற­மு­டி­யாது, பெரிய, சிறிய நாடு­கள் அனைத்­தும் சம­மா­னவை, தன்னாட்சி உரிமை கொண்­டவை என்ற அனைத்­து­லக அள­வில் இருக்­கும் ஒழுங்­கின் முக்­கிய அம்­சங்­களை இது கேள்­விக்­கு­றி­யாக மாற்­று­கிறது," என்று திரு பைடன் ரஷ்­யத் தாக்­கு­த­லைப் பற்­றிக் கூறி­னார். உக்­ரேன் மக்­களை ஆத­ரிப்­ப­தன் மூலம் கொள்­கை­களை நிலை­நாட்­டு­வ­தில் வழி­காட்­டி­யாக இருந்த சிங்­கப்­பூ­ருக்கு அவர் பிர­த­மர் லீயி­டம் நன்­றி­ தெரி­வித்­துக்­கொண்­டார்.

"தன்னாட்சி உரி­மை­, அர­சி­யல் ரீதி­யாக சுய­மாக இயங்­கு­வது, பெரிய, சிறிய நாடு­களின் எல்லை சார்ந்த உரி­மை­கள் ஆகி­ய­வற்றை மதிக்­க­வேண்­டும். எந்த நிலையிலும் கார­ண­மின்றி சுய ஆதி­பத்ய உரி­மை­யைக் கொண்ட ஒரு நாட்­டின் மீது வேறு நாட்டு ராணு­வம் படை­யெ­டுப்­பதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­து," என்று திரு லீ கூறி­னார்.