தங்களின் கட்டணங்களை 'ஏஎக்ஸ்எஸ்' (AXS) கைப்பேசிச் செயலி மற்றும் இணையத்தளம் மூலமாக ஓசிபிசி அட்டைகள் கொண்டு கட்டிய வாடிக்கையாளர்களுக்கு, தொகை இரண்டு முறை கழிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தங்களிடம் சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்ததை அடுத்து இதுபோன்ற 375 சம்பவங்களைத் தாங்கள் கண்டறிந்ததாக ஏஎக்ஸ்எஸ் குறிப்பிட்டது. இரட்டிப்பு பரிவர்த்தனைகள் அனைத்தும் திங்கட்கிழமைக்குள் சரிசெய்தாகிவிட்டதாக ஓசிபிசி வங்கி தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.
இவ்வாறு இருமுறை தொகை கழிக்கப்பட்டது, தங்கள் தரப்பில் நிகழவில்லை என்று ஏஎக்ஸ்எஸ் தெளிவுபடுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இருமுறை தங்களின் பற்று அட்டை மற்றும் கடன் அட்டையில் பரிவர்த்தனைகள் கழிக்கப்பட்டன.

