ஓசிபிசி அட்டைகளில் கூடுதல் தொகை கழிக்கப்பட்டது

ஓசிபிசி அட்டைகளில் கூடுதல் தொகை கழிக்கப்பட்டது

1 mins read
42060897-ea49-4d7c-b670-eab98ee2a846
-

தங்­க­ளின் கட்­ட­ணங்­களை 'ஏஎக்ஸ்­எஸ்' (AXS) கைப்பேசிச் செயலி மற்­றும் இணை­யத்­த­ளம் மூல­மாக ஓசி­பிசி அட்­டை­கள் கொண்டு கட்­டிய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, தொகை இரண்டு முறை கழிக்­கப்­பட்­டது.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளி­டம் சனிக்­கி­ழ­மை­யன்று தக­வல் தெரி­வித்­ததை அடுத்து இது­போன்ற 375 சம்­ப­வங்­க­ளைத் தாங்­கள் கண்­ட­றிந்­த­தாக ஏஎக்ஸ்­எஸ் குறிப்­பிட்­டது. இரட்­டிப்பு பரி­வர்த்­த­னை­கள் அனைத்­தும் திங்­கட்­கி­ழ­மைக்­குள் சரி­செய்­தா­கி­விட்­ட­தாக ஓசி­பிசி வங்கி தெரி­வித்­த­து­டன் பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மன்­னிப்பு கோரி­யது.

இவ்­வாறு இரு­முறை தொகை கழிக்­கப்­பட்­டது, தங்­கள் தரப்­பில் நிக­ழ­வில்லை என்று ஏஎக்ஸ்­எஸ் தெளி­வு­ப­டுத்­தி­யது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் டிபி­எஸ் வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் இரு­முறை தங்­க­ளின் பற்று அட்டை மற்­றும் கடன் அட்­டை­யில் பரி­வர்த்­த­னை­கள் கழிக்­கப்­பட்­டன.