300,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை

300,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை

2 mins read
b6f4d472-4e08-4536-a1e4-b61836307f73
-

அர­சாங்­கம் வழங்­கி­யுள்ள ஏறத்­தாழ 300,000 பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்­டு­கள் இன்­னும் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஒவ்­வொரு பற்­றுச்­சீட்­டின் மதிப்பு $30. அவற்­றைக் கொண்டு பொதுப் போக்­கு­

வ­ரத்து பயண அட்­டை­களை நிரப்­ப­லாம். அல்­லது மாதாந்­திர சலுகை அட்­டை­களை வாங்­க­லாம்.

பொதுப் போக்­கு­வ­ரத்துக் கட்­டண அதி­க­ரிப்­பைச் சமா­ளிக்க குடும்­பங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் 600,000 பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்­டு­களை அர­சாங்­கம் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் வழங்­கி­யது. அதி­க­பட்­சம் $1,600 தனி­ந­பர் வரு­மா­னம் கொண்­டுள்ள குடும்­பங்­கள் இந்­தப் பற்­றுச்­சீட்­டுக்­குத் தகுதி பெறு­கின்­ற­ன.

நேற்­றைய நில­வ­ரப்­படி இன்­னும் 300,000 பற்­றுச்­சீட்­டு­கள் இன்­னும் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

"குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு உதவ ஏப்­ரல் 2022லிருந்து 30,000க்கும் அதி­க­மான சமூ­கப் பரா­ம­ரிப்பு அமை­பப்­பு­க­ளுக்கு பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்­டு­கள் படிப்­ப­டி­யாக அனுப்பி வைக்­கப்­படும்," என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

இதற்கு முன் இல்­லாத அள­வில் இதுவே பொது­மக்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள ஆக அதி­க­மான பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்­டு­கள் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சும் மக்­கள் கழ­க­மும் கடந்த ஜன­வரி மாதம் தெரி­வித்­தன.

பற்­றுச்­சீட்­டு­க­ளுக்­குத் தகுதி பெற தனி­ந­பர் வரு­மா­னம் $1,200லிருந்து $1,600ஆக உயர்த்­தப்­பட்­டது. கடந்த ஆண்டு பொதுப் போக்­கு­வ­ரத்துக் கட்­ட­ணம் 2.2 விழுக்­காடு உயர்த்­தப்­பட்­டது. இதன் விளை­வாக பெரி­ய­வர்­க­ளுக்­கான கட்­ட­ணம் அட்டை மூலம் செலுத்­தப்­ப­டும்­போது பயண தூரத்­தைப் பொறுத்து மூன்­றி­லி­ருந்து நான்கு காசு அதி­க­ரித்­துள்­ளது.

மூத்­தோர், மாண­வர்­கள், உடற்­கு­றை­யுள்­ளோர், குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­கான சலு­கைக் கட்­ட­ணம் ஒரு காசு அதி­க­ரித்­தது.

ரொக்­க­மாக செலுத்­தப்­படும் கட்­ட­ணம், ஒரு­வ­ழிப் பய­ணம், மாதாந்­திர சலுகை, பயண அட்­டை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான விலை­யில் மாற்­றம் இல்லை.

பற்­றுச்­சீட்­டுக்­குத் தகுதி பெறு­ப­வர்­கள் அவற்­றைப் பெற்­றுக்­கொள்ள இணை­யம் மூலம் விண்­ணப்­பம் செய்­ய­லாம். அல்­லது சமூக நிலை­யங்­க­ளின் உத­வியை நாட­லாம்.

"வரு­மான அடிப்­ப­டை­யில் தகுதி பெறா­விட்­டா­லும் அல்­லது ஏற்­கெ­னவே பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்டு பெற்­ற­வ­ராக இருந்­தா­லும் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்ட நாங்­கள் தயா­ராக இருக்­கி­றோம்.

"உங்­கள் வீட்­டுக்கு மிக அரு­கில் உள்ள சமூ­க­நி­லை­யத்­துக்­குச் செல்­லுங்­கள். ஒவ்­வொ­ரு­வ­ரின் நிலை தனித் தனி­யாக ஆரா­யப்­பட்டு அவர்­க­ளது விண்­ணப்­பம் மதிப்­பீடு செய்­யப்­படும்," என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.