பணிப்பெண்: முதலாளிகள் பணம் திரும்ப பெற உரிமை

பணிப்பெண்: முதலாளிகள் பணம் திரும்ப பெற உரிமை

2 mins read
30c61f07-4c8a-4b0c-88ce-0dcb0fb8dc6c
-

ஆறு மாதத்திற்குள் வேலையைவிட்டு நீக்கினால் முகவையிடம் பணம் கோரலாம்

வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்ணை வேலை­யில் சேர்த்து ஆறு மாதங்­க­ளுக்­குள் அவரை நீக்­கி­விட்­டால் முத­லா­ளி­கள், வேலை நிய­மன முகவை அமைப்­புக்­குச் செலுத்­திய கட்­ட­ணத்­தில் குறைந்­த­பட்­சம் பாதி­யைத் திரும்பப் பெற­லாம்.

இதற்­கான உரிமை வரும் ஜூன் முதல் முத­லா­ளி­க­ளுக்கு உண்டு என்று மனி­த­வள அமைச்சு அறி­வித்து இருக்­கிறது. முத­லா­ளி­கள் வேலையில் சேர்க்கும் மூன்று பணிப்­பெண்­கள் வரை இந்­தத் தொகையைத் திருப்பி பெறும் உரிமை அவர்­க­ளுக்கு இருக்­கும்.

தொகை­யைத் திருப்பிக் கொடுக்­கும்­படி கேட்­கும் முத­லா­ளி­கள், அதோடு, வேறு இல்­லப் பணிப்­பெண் தேவை என்று வேண்டு­கோள் விடுக்­க­வும் முடி­யும்.

வேலை நிய­மன முக­வை­கள் இதற்­கான வாய்ப்பை அளித்தால் முத­லா­ளி­கள் அதைப் பயன்­படுத்­திக்கொள்­ள­லாம்.

முத­லா­ளி­கள் வேலை நிய­மனச் சட்­டங்­களை மீறி இருந்­தால் அல்லது இல்­லப் பணிப்­பெண்­களுக்கு எதி­ராக குற்­றங்­க­ளைச் செய்­தி­ருந்­தால், வேலை நிய­மன முக­வை­கள் நிர்வாகப் பணிகளை மட்டும் செய்து இருந்­தால் அந்­தத் தொகையை முக­வை­கள் திருப்பித் தர­வேண்­டாம்.

பணிப்­பெண் ஒரு­வர் பரா­ம­ரிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டால், அவரின் பரா­ம­ரிப்­பில் இருந்­த­வர் மர­ண­ம­டைந்­து­வி­டும் பட்­சத்­தில் இனி­மேல் அந்­தப் பணிப்­பெண்ணின் சேவை தேவை­யில்லை என்று அவர் வேலையில் இருந்து நீக்­கப்­ப­டு­வா­ரே­யா­னால், அல்­லது அந்­தப் பணிப்­பெண்­ணின் பரா­மரிப்­பில் இருந்­த­வர் வேறு ஒருவரின் பரா­மரிப்­புக்கு மாறிக்­கொள்­ளும் பட்சத்­தில் முத­லா­ளி­கள் தொகையைத் திரும்பப் பெற­ முடி­யாது.

தொகை­யைத் திருப்பித் தரும்­படி கேட்­கும் முத­லா­ளி­கள், இல்­லப் பணிப்­பெண்­ணின் வேலை நிய­மனத்தை முடிப்­ப­தற்கு முன்­ன­தாகவே அது பற்றி வேலை நிய­மன முகவையிடம் தெரி­வித்­து­விட வேண்­டும்.

இத­னி­டையே, இதுபற்றிக் கருத்து தெரி­வித்த மனி­த­வள அமைச்­சின் வெளி­நாட்டு ஊழி­யர் நிர்­வா­கப் பிரி­வின் வட்­டார இயக்கு­நர் கெவின் டியோ, முத­லா­ளி­கள், பணிப்­பெண்­கள் இரு­வ­ருக்­கும் பொருத்­த­மான சூழலை மேம்­ப­டுத்­தும் பல நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யாக இது இடம்­பெ­று­கிறது என்­று கூறினார்.

இதுபற்றிக் கருத்துக் கூறிய சிங்­கப்­பூர் வேலை நிய­மன முக­வர்­கள் சங்­கத்­தின் தலை­வர் திரு­வாட்டி கே. ஜெய­பி­ரேமா, சேவைக் கட்­ட­ணத்தைத் திரும்பக் கொடுக்கும் கொள்கை முத­லா­ளி­களும் வேலை நிய­மன முக­வை­களும் பொறுப்­பு­களைப் பகிர்ந்­து­கொள்­வ­தைப் பிர­தி­ப­லிப்­ப­தாக இருக்­கிறது என்­றார்.

முத­லா­ளிக்குப் பொருத்­த­மான பணிப்­பெண்­கள் கிடைக்­கும் வகை­யில் வேலை தொடர்­பான தேவை­களை முன்­ன­தா­கவே இரண்டு தரப்­பினரும் தெள்­ளத்­தெ­ளி­வாக அறி­விப்­ப­தற்கு இந்த ஏற்­பாடு ஊக்­க­மூட்­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இந்­தக் கொள்கை சர­ள­மாக அமல்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­படுத்­தும் வகை­யில் இந்­தச் சங்­கம் வேலை நிய­மன முக­வர்­க­ளுக்­கும் முத­லா­ளி­க­ளுக்­கும் வழி­காட்டி உத­வும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.