$128மி. எண்ணெய் சதி: ஒருவருக்கு 29 ஆண்டுச் சிறை

$128மி. எண்ணெய் சதி: ஒருவருக்கு 29 ஆண்டுச் சிறை

1 mins read
4dc34da9-c686-431e-ab55-a8b15d0c8562
-

ஷெல் ஈஸ்ட்­டர்ன் பெட்­ரோ­லி­யம் நிறு­வ­னத்­தின் புலாவ் புகோம் ஆலை­யில் இருந்து எரி­வாயு எண்­ணெய்யைத் தவ­றா­கக் கையாண்ட பெரும் சதி­யின் கார­ண­கர்த்­தாக்களில் ஒரு­வர் என்று கூறப்படும் ஜுவாண்டி புன்­காட், 45, என்­பவருக்கு 29 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வர்த்­தக குற்­றச் செயல்­க­ளுக்கு விதிக்­கப்­படும் மிக நீண்­ட­கால சிறைத்­தண்­ட­னை­களில் இது ஒன்று என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அவர், 2007லிருந்து குற்­றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. $128 மில்­லி­யன் மதிப்­புள்ள 203,403 டன் எண்­ணெய்யைத் தவ­றா­கக் கையாண்­ட­தாக கடந்த பிப்­ர­வ­ரி­யில் ஒப்­புக்­கொண்­டார். நம்­பிக்கை மோசடி தொடர்­பான 20 குற்­றங்­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.