உணவங்காடிக்காரர்களுக்கு டிபிஎஸ் நடத்தும் விழிப்புணர்வுப் பயிலரங்கு

1 mins read
fde383ec-0c03-453f-8a45-68b787ebbd5d
-

நேர்­மை­யான பண­மாற்று விவ­ரங்­களை அடை­யா­ளம்­ கா­ண­வும் தங்­க­ளது வங்கி, கட்­டண விவ­ரங்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­துக்­கொள்­ள­வும் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­க­ளுக்­குச் சொல்­லித்­தரும் டிபி­எஸ் வங்­கி­யின் பயி­ல­ரங்கு மூலம், சொங் பாங் சந்தை, உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­கள் பல­ன­டை­ய­வி­ருக்­கின்­ற­னர்.

சென்ற ஆண்டு வாடிக்­கை­யாளர்­கள் கடைக்­கா­ரர்­களை ஏமாற்­றிய சம்­ப­வங்­கள் புகா­ர­ளிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து வங்கி இத்­த­கைய நட­வ­டிக்­கை­யில் இறங்கி­யுள்­ளது.

கட்­ட­ணம் செலுத்­தி­ய­தற்­கான ஆதா­ர­மாக வாடிக்­கை­யா­ளர்­கள் போலி­யான அல்­லது பழைய பணப் பரி­வர்த்­த­னை­க­ளைக் காட்­டி­ய­தாக டிபி­எஸ் வங்­கி­யின் பேச்­சா­ளர் கூறி­னார். இத­னை­யொட்டி சென்ற செப்­டம்­ப­ரில் உண­வங்­காடி நிலை­யத்­தைத் தத்­தெ­டுக்­கும் திட்­டத்தை வங்கி தொடங்­கி­யது.

உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களுக்கு மின்­னி­லக்­கத் திறன்­க­ளைக் கற்­றுத்­த­ரு­வது இதன் நோக்கம்.

தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­து­டன் இணைந்து வங்கி இந்த மின்­னி­லக்­கப் பயி­ல­ரங்­கு­களை நடத்­த­வி­ருக்­கிறது.

உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் பாது­காப்­பான மின்­னி­லக்க முறை­களை அறிந்­து­கொள்ள உத­வு­வது மிக­வும் முக்­கி­யம் என்று சட்ட, உள்­துறை அமைச்­ச­ரும் நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு க. சண்­மு­கம் கூறினார்.