குண்டர் கும்பல் செயல்கள் குறித்து நிலவும் அச்சம்

குண்டர் கும்பல் செயல்கள் குறித்து நிலவும் அச்சம்

1 mins read
92f26113-f35f-4d51-b664-33d16f1bd1ee
-

சென்ற வாரம் பூன் லே டிரை­வில் ஆயு­தம் ஏந்­திய இரண்டு ஆட­வர்­கள் இரு­வ­ரைத் தாக்­கி­னர். அச் சம்­ப­வம் காணொ­ளி­யில் பதி­வா­னது. தாக்­கப்­பட்ட இரு­வ­ருக்­குப் பல வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­டன.

சந்­தேக நபர்­க­ளான இரு ஆட­வர்­கள் மீது ஆயு­தங்­க­ளைக் கொண்டு வேண்­டு­மென்றே மோச­மான காயங்­களை விளைவித்­த­தாகக் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவர்­களில் ஒரு­வ­ருக்கு 19 வயது, மற்­றொ­ரு­வ­ருக்கு 20 வயது. இது, குண்­டர் கும்­பல்­கள் சம்­பந்­தப்­பட்ட செயல் என்­பது உறு­தி­யா­க­வில்லை. இருந்­தா­லும், கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக இத்­த­கைய சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ள­தால் குண்­டர் கும்­பல் நட­வ­டிக்­கை­கள் அதி­க­­ரித்­தி­ருக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் சில­ரி­டையே நிலவி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் குண்­டர் கும்­பல் தொடர்­பி­லான நில­வ­ரம் கட்­டுக்­குள் இருப்­ப­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் சென்ற ஆண்டு நாடா­ளு­மன்­றத்­திற்கு எழுத்து வடி­வில் பதி­ல­ளித்­தார். 2016ஆம் ஆண்­டுக்­கும் 2020ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஆண்­டு­தோ­றும் சரா­ச­ரி­யாக 112 குண்­டர் கும்­பல்­கள் சம்­பந்­தப்­பட்ட மோச­மான தாக்­கு­தல்­களும் சண்­டை­களும் மட்டுமே பதி­வாகி வருவதாகவும் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமைச்­சர் சண்­முகம் குறிப்­பிட்­டார்.

எனி­னும், இளை­யர்­கள் குண்­டர் கும்­பல்­களில் சேர்­வது கவலை தரும் ஒன்று என்­றும் அவர் சொன்­னார். அத­னால்­தான் இளை­யர்­களை குண்­டர் கும்­பல்­களில் சேரா­மல் தடுக்க அவர்­க­ளி­டையே விழிப்­புணர்வை வளர்க்­கப் பல முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் திரு சண்­மு­கம் கூறி­னார்.