ஆளில்லா வானூர்திகளைக் கண்காணிக்கும் புதிய திட்டம்

ஆளில்லா வானூர்திகளைக் கண்காணிக்கும் புதிய திட்டம்

1 mins read
ec698c30-c14b-421b-9371-b6ebee0714ef
-

சிங்­கப்­பூ­ரில் ஜூன் 1ஆம் தேதி­யில் இருந்து, வர்த்­தக ரீதி­யா­கப் பயன்­படுத்­தப்­படும் ஆளில்லா வானூர்­தி­கள் (படம்) அனைத்­தி­லும் கண்­கா­ணிப்­புக் கரு­வி­க­ளைப் பொருத்­த­வேண்­டி­யது அவ­சி­யம்.

குறிப்­பாக, இணை­யத் தொடர்பு மூலம் இருப்­பி­டம் குறித்த தக­வல்­களைப் பகி­ரும் வசதி இல்­லாத வானூர்­தி­க­ளுக்கு இது கட்­டா­யம். விமா­னப் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்பை அதி­க­ரிப்­பது இதன் நோக்­கம்.

சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் புதிய விதி­யின்­கீழ், 250 கிரா­முக்கு அதி­க­மான எடை­கொண்ட ஆளில்லா வானூர்­தி­க­ளுக்கு இது பொருந்­தும்.

உரி­மம் பெற்று ஆளில்லா வானூர்­தி­களை இயக்­கும் அனை­வ­ரை­யும் நிர்­வ­கிக்­க­வும் சிங்­கப்­பூர் ஆகா­யப் பரப்­பில் ஆளில்லா வானூர்­தி­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­க­வும் இந்த நடை­முறை உத­வும்.

இதற்­கான செய­லியை ஆளில்லா வானூர்­தியை இயக்­கு­வோர் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்ள வேண்­டும். ஜூன் 1ஆம் தேதி­யில் இருந்து அதில் பெறப்­படும் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் செயல்­பட வேண்­டும்.

விதி­மு­றை­களை மீறி­யது நிரூ­பிக்­கப்­பட்­டால் பத்­தா­யி­ரம் வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ ஆறு மாதம் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

மார்ச் 15ஆம் தேதி நில­வ­ரப்­படி, 237 தனி­ந­பர்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் ஆளில்லா வானூர்­தி­களை இயக்­கு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.