2029லிருந்து சொந்த மருத்துவர் பட்டம் வழங்கும் என்டியு மருத்துவக் கல்லூரி

2029லிருந்து சொந்த மருத்துவர் பட்டம் வழங்கும் என்டியு மருத்துவக் கல்லூரி

2 mins read
6a22e6cf-39f4-4493-812f-0cfc063f8738
-

நன்­யாங் பல­து­றைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­டியு) லீ கோங் சியன் மருத்­து­வக் கல்லூரி 2029ஆம் ஆண்­டி­லி­ருந்து அதன் மருத்­து­வப் பட்­டங்­களை வழங்க இருக்­கிறது.

அதன்­படி 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து அக்கல்லூரியில் சேர்ந்­துப் பயி­லும் மருத்­து­வக் கல்வி மாண­வர்­க­ளுக்கு என்­டியு மருத்­து­வக் கல்லூரி சுய­மாக வழங்­கும்

மருத்­துவர் பட்­டம் கிடைக்­கும்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி அக்கல்லூரியில் மருத்­து­வக் கல்வி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் மருத்­து­வப் பட்­டங்­களில் என்­டியு மற்­றும் லண்­டன் இம்­பீ­ரி­யல் கல்­லூ­ரி­யின் பெயர்­கள் இடம்­பெ­று­கின்­றன.

திட்­ட­மிட்­ட­படி 2028ஆம் ஆண்­டு­டன் என்­டி­யு­வுக்­கும் இம்­பீ­ரி­ய­ல் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான பங்­கா­ளித்­து­வம் முடி­வ­டை­கிறது. இவ்­வாண்­டி­லும் அடுத்த ஆண்­டி­லும் என்­டியு மருத்­து­வக் கல்லூரியில் சேரும் மாண­வர்­க­ளுக்கு இரு கல்லூரிகளின் பெயர்­க­ளைக் கொண்ட மருத்­து­வப் பட்­டங்­கள் கிடைக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் வளர்ந்­து­வ­ரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய லீ கோங் சியன் மருத்­து­வக் கல்லூரி 2010ஆம் ஆண்­டில் அமைக்­கப்­பட்­டது. 2013ஆம் ஆண்­டில் அதன் முதல் மாண­வர் பிரிவை அது வர­வேற்­றது. அவர்­கள் 2018ஆம் ஆண்­டில் பட்­டம் பெற்­ற­னர்.

லீ கோங் சியன் மருத்­து­வக் கல்லூரியின் பாடத்­திட்­டம் கிட்­டத்­தட்ட இம்­பீ­ரி­யல் கல்­லூ­ரி­யின் பாடத்­திட்­டத்­தைப் போன்­றது.

சிங்­கப்­பூ­ரின் தேவை­க­ளுக்கு ஏற்ப சில மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. குழு அடிப்­ப­டை­யி­லான கற்­றல், ஆரம்­ப­நி­லை­யி­லேயே மருத்­து­வச் சேவை வழங்­கும் அனு­ப­வத்தை மாண­வர்­க­ளுக்கு வழங்­கு­வது ஆகிய அணு­கு­மு­றை­களை லீ கோங் சியன் மருத்­து­வக் கல்லூரி கடைப்­பி­டிக்­கிறது.

முதல் சில ஆண்­டு­களில் இம்­பீ­ரி­யல் கல்­லூ­ரி­யன் தலை­வர் லீ கோங் சியன் மருத்­து­வக் கல்லூரி­யின் தலை­வ­ரா­க­வும் செயல்­பட்­டார். லீ கோங் சியான் மருத்­து­வக் கல்லூரியின் முக்­கிய ஊழி­யர்­

க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தில் இம்­பீ­ரி­யல் கல்­லூரி பெரும் பங்கு வகித்­தது.

2014ஆம் ஆண்­டில் லீ கோங் சியன் மருத்­து­வக் கல்லூரிக்குப் புதிய தலை­வர் நிய­மிக்­கப்பட்டார். அக்கல்லூரியின் துறை­சார்ந்த உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் தற்­போது சிங்­கப்­பூரை மைய­மா­கக் கொண்­ட­வர்­கள். அவர்­களில் சிலர் தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தைச் சேர்ந்த மருத்­துவ நிபு­ணர்­கள்.