ஃபோர்மல்டிஹைட் எனப்படும் ரசாயனம் பொதுவாக கட்டுமானப் பொருள்களிலும் வீட்டிற்கான மரக்கலன்களிலும் பயன்படுத்தப்
படுகிறது.
ஆனால் இந்த ரசாயனம் அதிக அளவில் பயன்படுத்தப்படும்போது அது வெளியேற்றும் துகள்கள் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியதாக உள்ளன.
எனவே உட்புறங்களில் குறைந்த பாதிப்புள்ள ஃபோர்மல்டிஹைட் ரசானத்தைப் பயன்படுத்த வர்த்தகங்களும் அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.
நீடித்த நிலைத்தன்மை உள்ள இடங்களுக்கான செயல் கூட்டணியின் ஒரு பகுதியாக இந்தக் குறைந்த பாதிப்புள்ள ஃபோர்மல்டிஹைட் கடப்பாட்டுத் திட்டம் உள்ளது.
பொதுமக்களிடையே விழிப்
புணர்வை ஏற்படுத்தவும் நீடித்த நிலைத்தன்மைத் திட்டங்களுக்கு ஏற்புடைய பொருள்களை விற்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆரோக்கியமான வாழ்வையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
2030 சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தை இந்தத் திட்டம் ஆதரிக்கிறது.
சாயம் உற்பத்தி நிறுவனமான 'கஷ்'ஷின் ஆலைக்கு நேற்று சென்றிருந்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இத்திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
குறைந்த பாதிப்புள்ள ஃபோர்மல்டிஹைட்டைப் பயன்படுத்த பற்றுறுதி எடுத்துக்கொண்ட 75 அமைப்புகளில் கஷ் நிறுவனமும் ஒன்று.
சொத்து, மரக்கலன் உற்பத்தி போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் வர்த்தகச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், சிங்கப்பூர் மரக்கலத் துறை மன்றம், சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம் ஆகியவை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கூட்டணியை அமைத்தன.

