சாலை விபத்து: குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்

சாலை விபத்து: குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்

1 mins read
366f9379-ae6c-4fd9-9510-78ee5a6c508b
-

வழக்­க­றி­ஞர் லாரன்ஸ் கோ எங் யாவ் கவ­னக்­கு­றை­வாக காரை ஓட்­டி­ய­தால் ஏற்­பட்ட விபத்­தில், மோட்­டார்­சைக்­கி­ளோட்டி வோங் இயூ வாய், 33, என்­ப­வர் உயி­ரி­ழந்­தார். 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் 12ஆம் தேதி ஆயர் ராஜா விரை­வுச்­சா­லை­யில் முதல் தடத்­தில் கோ காரை ஓட்­டிக்­கொண்டு இருந்­தார். போக்­கு­வ­ரத்து நெரி­சல் கார­ண­மாக அவ­ருக்கு முன்­னால் இருந்த கார்­கள் நின்­றன.

முன்­னால் நின்ற காரு­டன் மோது­வ­தைத் தவிர்க்க, கோ தமது காரை இட­து­பு­றம் திருப்­பி­ய­தில், விரை­வுச்­சா­லை­யின் இரண்­டாம் தடத்­தில் சென்­று­கொண்­டி­ருந்த திரு வோங் மீது அது மோதி­யது. மூன்­றாம் தடத்­திற்­குத் தள்­ளப்­பட்ட திரு வோங் மீது லாரி ஒன்று ஏறி­ய­தில் அவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார்.

கவ­னக்­கு­றை­வாக காரை ஓட்டி மோட்­டார்­சைக்­கி­ளோட்­டிக்கு மர­ணம் விளை­வித்த குற்­றத்தை கோ நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

தம்­மு­டைய கட்­சிக்­கா­ரர் மிகுந்த வேதனை அடைந்­துள்­ள­தா­க­வும் விபத்து நிகழ்ந்த தரு­ணத்­தில் அனு­ம­திக்­கப்­பட்ட வேகத்­தை­விட அவர் காரை வேக­மாக ஓட்­ட­வில்லை என்­றும் தற்­காப்பு வழக்­க­றி­ஞர் ரமேஷ் திவாரி நேற்று நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

ஏப்ரல் 29ஆம் தேதி கோவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.