2023ல் புதிய சிறப்பு காவல்படைப் பிரிவு

2023ல் புதிய சிறப்பு காவல்படைப் பிரிவு

2 mins read
dcad5918-4a6c-4e48-b0ac-f04d052c5ae5
-

பாலி­யல் குற்­றச்­செ­யல்­கள், குடும்ப வன்­முறை ஆகி­ய­வற்­றில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்க, அடுத்த ஆண்டு புதிய காவல்­ப­டைப் பிரிவு ஒன்றை அமைக்­க­வி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

பாலி­யல் குற்­றங்­க­ளை­யும் குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளை­யும் கையா­ளும் அனு­ப­வ­மும், பாதிக்­கப்­பட்­டோரை மேம்­பட்ட முறை­யில் நிர்­வ­கிக்­கும் திற­னும் கொண்ட காவல்­துறை அதி­கா­ரி­கள் அதில் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.

'பாலி­யல் குற்­றம், குடும்ப வன்­மு­றைக்கு எதி­ரான காவல்­ப­டைப் பிரிவு' அமைக்­கப்­ப­டு­வது குறித்து சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று அறி­வித்­தார்.

பாலி­யல் குற்­றங்­க­ளைக் கையாள்­வ­தில் அர­சாங்­கம் மிக வலு­வான, உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இது தொடர்­பான சட்ட நடை­மு­றை­கள் கடந்த ஆண்­டு­களில் வலு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் காவல்­துறை அதன் செயல்­முறையை மறு­ஆய்வு செய்து, பாதிக்­கப்­பட்­டோர் என்ன செய்­ய­லாம் என்­பது குறித்­துப் பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

காவல்­துறை 'கேன்­டோன்­மண்ட்' வளா­கத்­தில் நடை­பெற்ற பாலி­யல் வன்­முறை விழிப்­பு­ணர்­வுக் கருத்­த­ரங்­கில் திரு சண்­மு­கம் உரை­யாற்­றி­னார்.

இதில் காவல்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, இதர அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­ட­னர்.

2017க்கும் 2020ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் 9,200 பாலி­யல் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் சிறு­வர்­களும் அடங்­கு­வர். இவற்­றில் 869 சம்­ப­வங்­களில், குடும்ப உறுப்­பி­னர்­கள் அல்­லது உற­வி­னர்­கள் குற்­றச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சென்ற ஆண்டு புகா­ர­ளிக்­கப்­பட்ட பாலி­யல் குற்­றச் செயல்­களில் 42 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னவை மான­பங்­கச் செயல்­கள். அதற்கு முந்­தைய ஆண்­டை­விட இது கிட்­டத்­தட்ட 12% அதி­கம்.

பதி­னோரு ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில் சென்ற ஆண்டு சிறு­வர்­கள் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான சம்­ப­வங்­கள் 70% அதி­க­ரித்­தன.

பாலி­யல் குற்­றச்­செ­யல்­களை மேம்­பட்ட முறை­யில் கையாள அதி­கா­ரி­க­ளுக்கு சிறப்­புப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­வ­து­டன் மர­பணு மாதி­ரி­க­ளைச் சேக­ரிப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்­தி­லும் கவ­னம் செலுத்­தப்­படும் என்று திரு சண்­மு­கம் கூறி­னார்.

பத்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கத் தீர்­வு­காண இய­லா­மல் இருந்த பாலி­யல் வழக்­கில் மர­பணு மாதிரி மூலம் காவல்­துறை அதி­கா­ரி­கள் ஆதா­ரத்­தைக் கண்­ட­றிந்­ததை அவர் சுட்­டி­னார்.

பாலி­யல் குற்­றச்­செ­யல்­கள், குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரைக் கையாள, சமூ­கப் பங்­கா­ளித்­துவ நிறு­வ­னங்­க­ளு­டன் காவல்­துறை அணுக்­க­மா­கச் செயல்­படும் என்­றார் அமைச்­சர்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் 'எஸ்ஜி ஹெர் எம்­ப­வர்­மண்ட்' எனும் அற­நி­று­வ­னம் தொடங்­கப்­பட்­டது குறித்து அமைச்­சர் மகிழ்ச்சி தெரி­வித்­தார். மூத்த வழக்­க­றி­ஞர் ஸ்டெ­ஃபனி இயு­யென் தியோ தலை­மை­யி­லான அந்த அற­நி­று­வ­னம் இணை­யத்­தி­லும் பாலி­யல் ரீதி­யா­கவும் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான பெண்­க­ளுக்கு இல­வச சட்ட ஆலோ­சனை வழங்­கு­கிறது.

பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் காவல்துறை