மவுண்ட்பேட்டன் ரோட்டில் பழைமைப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருக்கும் முற்றுரிமை பங்களா ஒன்று விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 27 மில்லியன் வெள்ளியாக இருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களா 1920களில் கட்டப்பட்டது. இது, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களின் வடிவமைப்பைக் ெகாண்டுள்ளது.
'செஞ்சுரி 21', 'ஹட்டன்ஸ் ஏஷியா' ஆகிய நிறுவனங்கள் விற்பனைக்காக இதை இணைந்து விளம்பரப்படுத்துகின்றன.
தற்போது 'சிங் ஹியூ' ஹோட்டலாக இயங்கிவரும் இந்த பங்களாவிற்கு அருகே இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் காத்தோங் பார்க் பெருவிரைவு ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

