சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் செடிகளில் 12 வகை செடிகள் மண்ணிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தங்களை அகற்றக்கூடியவை என உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இம்மாதம் தொடக்கத்திலிருந்து மண்ணிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தங்களை அகற்றும் முன்னோட்டத் திட்டம் நடத்தப்பட்டது.
சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள தொழில்துறை நிலத்தில் இது நடத்தப்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), தேசிய பூங்காக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னோட்டத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நடத்தப்படும்.
இந்த 12 வகை செடிகள் மண்ணிலிருந்து அகற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.