வார இறுதியில் ேஜாகூருக்குப் படையெடுக்கும் சிங்கப்பூரர்கள்

வார இறுதியில் ேஜாகூருக்குப் படையெடுக்கும் சிங்கப்பூரர்கள்

2 mins read
c4456706-98e3-4eae-aaf6-cdb66151496d
எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் நீண்ட வரிசையும் வழக்கமாகிவிட்டன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்­வார இறு­தி­யில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்­கள் விடு­முறை வரு­வ­தால் இது நாள் வரை கட்­டிப் போடப்­பட்­டி­ருந்த சிங்­கப்­பூ­ரர்­கள் ஜோகூர் பாரு­வுக்­குப் படை­யெ­டுக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதற்கு ஏற்ப ஜோகூர் பாரு­வில் உள்ள ஹோட்­டல் அறை­கள் நிரம்பி வரு­கின்­றன. சிங்­கப்­பூ­ரர்­க­ளி­ட­ம் இ­ருந்து ஹோட்­டல் அறை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­வ­தால் கட்­ட­ணங்­களும் கூடி வரு­கின்­றன. கடந்த வார­யி­றுதி நாட்­க­ளை­விட (ஏப்­ரல் 9-10) இவ்­வார இறு­தி­யில் ஹோட்­டல் அறை­க­ளுக்­கான முன்­ப­திவு இரண்டு மடங்­குக்கு மேல் அதி­க­ரித்­துள்­ள­தாக பயண முன்­ப­திவு தளங்­கள் தெரி­விக்­கின்­றன.

'எக்ஸ்­பீ­டியா' குழு­மத்­தின் ஆசி­யா­வுக்­கான பொதுத் தொடர்­புப் பிரி­வின் தலை­வ­ரான லாவி­னியா ராஜா­ராம், வார இறுதி சுற்­றுலாத் தளங்­களில் ஜோகூர் பாரு பிர­ப­ல­மாக விளங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார். பல சிங்­கப்­பூ­ரர்­கள் நீண்ட வார இறு­தி­யைப் பயன்­ப­டுத்தி விடு முறை­யில் செல்ல விரும்­புவதாக அவர் கூறினார்.

'டிரிப்­அட்­வை­சர்' முன்­ப­திவு தளத்­தில் முந்­தைய வார­யி­றுதி யைவிட இவ்­வார இறு­திக்­கான ஹோட்­டல் அறை­க­ளின் கட்டணங்­கள் 18 விழுக்­காடு கூடி­யுள்ளது.

அதன் உல­க­ளா­வி­யச் சந்­தைப் பிரி­வின் உதவி தலை­வ­ரான ஜேன் லிம், ஏப்­ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்­கப்­பூர்-மலே­சிய எல்­லை­கள் திறக்­கப்­பட்­ட­தால் உள்­ளூர்­கா­ரர்­கள் விடு­மு­றை­யில் செல்­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது என்­றார்.

சிங்­கப்­பூ­ரர்­களுக்கு சுற்­றுலா என்­பது விமா­னத்­தில் செல்­வது அல்ல, எல்­லை­யைத் தாண்டி காரில் செல்­வது என்று அவர் சொன்னார்.

ஜோகூர் பாரு­வில் 146 அறை­ க­ளைக் கொண்ட சிட்­ரஸ் ஹோட்­ட­லில் இவ்­வார இறு­தி­யில் அனைத்து அறை­களும் நிரம்­பி­விட்­டன. இவற்றில் 75 விழுக்­காடு சிங்­கப்­பூ­ரர்­க­ளால் முன்­ப­திவு செய்­யப்­பட்­டவை.

கடந்த வார­யி­று­தி­யில் இதே ஹோட்­ட­லில் 50 விழுக்­காடு நிரம்பி யிருந்தது. இவற்­றில் பாதி சிங்­கப்­பூ­ரர்­க­ளால் நிரம்­பி­யது.

வர்த்­தக மேம்­பாட்டு, செயல்­முறைப் பிரி­வின் மூத்த உதவி தலை­வ­ரான தேஜிந்­தர் சித்து, ஏப்ரல் 1க்குப் பிறகு ஹோட்­டல் அறை­க­ளுக்­கான தேவை அதி­ கரித்து வரு­வதாகக் கூறி­னார்.

சுமார் 345 அறை­கள் உள்ள ரினை­சன்ஸ் ஜோகூர் பாரு ஹோட்­ட­லில் கட்­ட­ணங்­கள் 15 முதல் 20 விழுக்­காடு வரை அதி­க­ரித்­துள்­ளன. இதன் பொது நிர்­வா­கி­யான கனிட் சங்­மூக்டா, இவ்­வார இறுதி­ யில் 70 முதல் 75 விழுக்­காடு வரை அறை­கள் நிரம்­ப­லாம் என தமது எதிர்­பார்ப்­பைத் தெரி­வித்­தார்.

"கடைசி ேநர முன்­ப­திவு திடீ­ரென அதி­க­ரிக்­க­லாம்," என்றும் அவர் தெரிவித்தார்.