கரையோரப் பூந்தோட்டங்களுக்குப் புதிய பெருமை கிடைத்துள்ளது. உலகளாவிய நீடித்த நிலைத்தன்மை சுற்றுலா மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'எர்த்செக்' எனும் திட்டத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது. நீடித்த நிலைத்தன்மைமிக்க இடமாக தேர்வு பெற்ற முதல் சிங்கப்பூர் இடம் கரையோரப் பூந்தோட்டங்களாகும்.
சுற்றுச்சூழலையொட்டி செயல் படும் சுற்றுலாத் தளங்களுடன் சேர்ந்து 2003ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
கிளாஸ்கோ, கிரின்லாந்தில் உள்ள நுயூக் உட்பட 27 சுற்றுலாத் தளங்கள் இதில் இடம்பெற்று உள்ளன.

