முன்னாள் முதலாளியை மிரட்டியவருக்கு அபராதம்

முன்னாள் முதலாளியை மிரட்டியவருக்கு அபராதம்

1 mins read
e5d961d2-494d-452c-aa31-a68684564253
-

வேலையை விட்டு 20 ஆண்­டுக்­கும் மேல் ஆன நிலை­யில், முன்­னாள் முத­லாளி தனக்கு $500 தரத் தவ­றி­ய­தாக எண்ணி வெறுப்­புற்ற ஆட­வர் தொலை­பே­சி­யில் மிரட்­டல் விடுத்­ததை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து அவ­ருக்கு $2,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

62 வயது சீட் கியான் எங், தனது முன்­னாள் முத­லாளி திரு நியோவை தொலை­பே­சி­யில் அழைத்து 'உன் மொத்த குடும்­ப­மும் உயி­ரி­ழக்க நேரி­டும்' என்று மிரட்­டி­ய­தா­க நீதிமன்றத்தில் கூறப்­பட்­டது.