தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கைக்கு $100,000 நிதி திரட்டும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

1 mins read
6f6f89bb-559c-4e94-abe2-51e7da5bc46b
படம்: ஏஃபி -

சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் 100,000 வெள்ளி பெறு­மா­ன­முள்ள மருத்­து­வப் பொருள்­க­ளை­யும் இதர அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளை­யும் இலங்­கைக்கு வழங்க உறு­தி­ய­ளித்­துள்­ளது.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் மிக­வும் சிர­மப்­படும் இலங்­கைச் சமு­தா­யத்­திற்கு உத­விக்­க­ரம் நீட்­டு­வது இதன் நோக்­கம்.

இதன் தொடர்­பில் பொது­மக்­கள் நன்­கொடை வழங்க ஏது­வாக, சங்­கம் பொது நிதித் திரட்­டுக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளது. திரட்­டப்­படும் நிதி மருந்து, மருத்­து­வக் கரு­வி­கள் வாங்க பயன்­ப­டுத்­தப்­படும்.

இலங்­கை­யின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு மிக­வும் சீர்­கு­லைந்­த­தா­கத் தக­வல் வெளி­யா­ன­தை­ய­டுத்து சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் இவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

உயிர்­காக்­கும் மருந்­து­க­ளுக்கு இலங்­கை­யில் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

உணவு, மருந்து, எரி­பொ­ருள், மின்­சா­ரம் ஆகி­ய­வற்­றுக்­குப் பற்­றாக்­குறை நில­வு­வ­தால் இலங்கை மக்­கள் மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் பெஞ்­ச­மின் வில்­ல­யம் குறிப்­பிட்­டார்.

இலங்­கை­யில் உள்ள குடும்­பங்­க­ளுக்­கும், தனி­ம­னி­தர்­க­ளுக்­கும் மிக­வும் சிர­ம­மான இந்த நேரத்­தில் அத்­தி­யா­வ­சிய நிவா­ர­ணப் பொருள்­க­ளைக் கொடுத்து உதவ வகை­செய்­யும் இந்த நிதித்­தி­ரட்­டிற்கு மன­மு­வந்து ஆத­ரவு வழங்­கும்­படி அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இவ்­வே­ளை­யில் நன்­கொடை வழங்க விரும்­பு­வோர், சங்­கத்­தின் பெய­ருக்­குக் காசோ­லை­யா­கவோ 'பேநவ்' மூல­மா­கவோ வழங்­க­லாம் என்று சிங்­கப்­பூர்ச் செஞ்­சி­லு­வைச் சங்­கம் கூறி­யது. காசோலை வழங்க விரும்­பு­வோர், செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் பெயரை எழுதி அதனை அஞ்­ச­லில் அனுப்­பி­வைக்­கும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.